"ஜனநாயகம் பற்றி பேசுவோர் எதிர்க்கட்சி பதவியை பொது எதிரணிக்கு தர வேண்டும்"

Published By: Vishnu

09 Aug, 2018 | 05:30 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) 

ஜனநாயகம் பற்றி பேசும் இந்த அரசாங்கம் பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவியை பொது எதிரணிக்கு தரவேண்டும். 70 பேர் எதிர்க்கட்சியின் கடமையை செய்யும் நிலையில் எம்மை புறக்கணிக்க வேண்டாம் என பொது எதிரணி உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சம்பள மற்றும் ஏனைய  கொடுப்பனவு குறித்த பிரேரணை, சேர் பெறுமதி வரி ( திருத்த ) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

நல்லாட்சி அரசாங்கத்தில் எந்தவொரு சுயாதீன ஆணைக்குழுவும் சுயாதீனமாக இயங்கவில்லை. பொலிஸ் பக்கசார்பாக செயற்படுகின்றது. சமுர்த்தி  சேவையாட்கள்  மிகவும் மோசமாக நடத்தப்படுகின்றனர். ஓய்வுபெற்ற அரச சேவையாட்களுக்கு  சமுர்த்தி சேவை மட்டுப்படுத்தப்படுகின்றது. சாதாரண மக்களுக்கு தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க இடமளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58