''பஷிலின் எலும்புத்துண்டுகளை புசித்தோர் வாந்தியெடுப்பர்''

Published By: MD.Lucias

03 Mar, 2016 | 09:13 AM
image

பஷில் ராஜபக் ஷவின் “எலும்புத் துண்­டு­களை” சாப்­பிட்டோர் விரைவில் வாந்தி எடுக்க நேரிடும். அதே­வேளை பஷி­லுக்கு எதி­ரான முறைப்­பா­டு­களை பொது­மக்கள் விசேட நிதிக் குற்­றப்­பி­ரி­வுக்கு (எப்.சி.ஐ.டி) அறி­விக்­கலாம் என்றும் நீர்ப்­பா­ச­னத்­துறை அமைச்சர் விஜித் விஜி­த­முனி சொய்ஸா தெரி­வித்தார். 

மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே, ரோஹித அபேகுண­வர்த்­தன போன்­றோ­ருக்கு எதி­ராக மஹிந்த ராஜபக் ஷவே குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தினார் என் றும் அமைச்சர் குற்றம் சாட்­டினார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்றுமுன் தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற அர­சாங்­கத்தின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அமைச்சர் விஜித் விஜி­த­முனி சொய்சா இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

ஊழல் மோச­டிகள் தொடர்­பாக விசா­ர­ணை­களை பொலி­ஸாரும் விசேட நிதிக்­குற்றப் பிரி­வி­னரும் மேற்­கொண்­டனர். இவ் விசா­ர­ணைகள் பெரும்­பாலும் முடிந்துவிட்­டன. இவ்­வாறு முடி­யப்­பெற்ற விசா­ர­ணை­களில் சந்­தேக நபர்கள் விரைவில் கைது செய்­யப்­ப­டு­வார்கள். ஊழல் மோச­டிக்­கா­ரர்­களை கைதுசெய்­ய­வில்­லையா? விசா­ர­ணை­க­ளுக்கு என்ன நடந்­தது என கடந்த காலங்­களில் கேள்­வி­களை எழுப்­பி­னார்கள். ஆனால் இன்று விசா­ர­ணைகள் முடி­வு­பெற்று சந்­தேகநபர்­களை கைதுசெய்து சட்­டத்தின் முன்­நி­றுத்த முனை­கையில் அதனை அர­சியல் பழி­வாங்கல்கள் என முத்­திரை குத்­து­கின்­றனர்.

இதில் அர­சியல் பழி­வாங்­கல்கள் கிடை­யாது. அனைத்தும் சட்­டப்­பி­ர­கா­ரமே இடம்­பெ­று­கின்­றன. எனவே நல்லநல்ல விளை­யாட்­டுக்­களை விடியும் போது கண்­டு­கொள்­ளலாம்.

அரசின் பொறுமை எல்லை தாண்­டி­விட்­டது. இனி சட்டம் தன் கட­மையை விரை­வு­ப­டுத்தும். ஊழல் மோச­டிக்காரர்­க­ளுடன் எந்தவித­மான “டீலும்” கிடை­யாது. அதே­வேளை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தான் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே மற்றும் ரோஹித அபே­கு­ண­வர்­த்தன ஆகி­யோ­ருக்கு எதி­ராக முறைப்­பா­டு­களை முன்­வைத்தார்.

கடந்த ஆட்­சியில் ஒரு சிலர் இறைச்­சியை முழு­மை­யாக சாப்­பிட்­டார்கள். ஒரு சிலர் பஷில் ராஜ பக் ஷ தூக்­கி­யெ­றிந்த எழும்புத் துண்­டு­களை சாப்­பிட்டார்கள். இவர்கள் அனை­வரும் எதிர்­கா­லத்தில் வாந்தி எடுக்க நேரிடும். கடந்த ஆட்­சியில் தங்­காலை மார்க்கெட்டின் மீன் வியா­பா­ரியும் ஜனா­தி­ப­தியின் ஆலோ­ச­க­ராக கடமை புரிந்­துள்ளார்.

பஷில் ராஜபக் ஷ சமுர்த்தி பணமான 7000 மில்­லி­யன் ரூபாவை பதுளை மாகாண சபைத் தேர்­தலில் சசீந்­திர ராஜபக் ஷவை வெற்றிபெறச் செய்­வ­தற்கு மக்­க­ளுக்கு இல­வ­ச­மாக மேற்­கண்ட தொகையை வழங்­கினார். அவ­ரது தேவைக்­கேற்­பவே சுதந்­திரக் கட்­சியின் அலு­வ­ல­கங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டன. இதனை எதிர்த்தேன். ஆனால் தடுக்க முடி­ய­வில்லை. சட்டவிரோ­த­மாக யானை­களை வைத்­தி­ருந்­தோரை கைதுசெய்தேன். இடையில் அதனை நிறுத்துமாறு பஷில் உத்தரவு போட்டார். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நல்லாட்சியில் முன்னாள் ஆட்சியின் ஊழல் மோசடிக்காரர்களை இணைத்துக் கொள்ளக்கூடாது என்றும் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய...

2025-11-15 15:14:08
news-image

மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை...

2025-11-15 19:39:33
news-image

வலையில் சிக்கிய அரிய வகை கடல்...

2025-11-15 14:58:45
news-image

செல்வ சந்நதியில் ஆலய சூழலில் சுகாதார...

2025-11-15 15:02:58
news-image

பாடசாலைக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை...

2025-11-15 16:49:01
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-15 15:01:34
news-image

19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-11-15 17:45:33
news-image

“கெஹெல்பத்தர பத்மே”வுக்கு சொந்தமான வங்கி கணக்குகள்...

2025-11-15 15:21:43
news-image

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் ஆசிரிய மாணவர்களுக்கு...

2025-11-15 16:09:03
news-image

டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை பேணிய...

2025-11-15 13:45:40
news-image

“பாணந்துறை குடு சலிந்து“வின் போதைப்பொருள் வலையமைப்பை...

2025-11-15 15:42:26
news-image

யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல்...

2025-11-15 13:19:06