நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவைப்படகுகளால் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!!!

Published By: Digital Desk 7

08 Aug, 2018 | 04:22 PM
image

கிளிநொச்சி, கிராஞ்சி இலவங்குடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவைப்படகுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு இரண்டு தடவைகள் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோதும், இதுவரை அகற்றப்படாமையினால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராஞ்சி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய கடற்பகுதிகளில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் கைது செய்யப்பட்ட சுமார் 40 வரையான இந்திய இழுவைப்படகுகள் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக கடற்படையினரின் பாதுகாப்பில் கிளிநொச்சி கிராஞ்சி சிறிமுருகன் கடற்தொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்க எல்லைக்குட்பட்ட இலவங்குடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் குறித்த கடற்பகுதியில் கடற்தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்ட 60 இற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் தமது வாழவாதாரத் தொழில்களை செய்ய முடியாது போயுள்ளதாகவும் இவ்வாறு நிறுததி வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவைப்படகுகளில் இருந்து வெளியேறுகின்ற எண்ணைக்கசிவுகளால் கரையோரக்கடல் பகுதிகள் மாசடைவதுடன் கடல் வாழ் உயிரினங்கள், கடற் தாவரங்கள் அழிவடைவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு தமது வாழ்வாதாரத்தொழில்களை முன்னெடுக்கும் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவைப்படகுகளை அகற்றி தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வழிவகை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும், தொடர்ந்தும் யூன் மாதம் 12ஆம் திகதி நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இவற்றை அகற்றித்தருவதாக தெரிவித்த போதும், இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவைப்படகுகள் இதுவரை அகற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ள கடற்தொழிலாளர்கள் தமது வாழவாதாரத்தொழில்களை முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையில் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவைப்படகுகளை அகற்றித்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29
news-image

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில்...

2026-02-13 16:47:13