"என்னிடம் ஆயுதம் இருக்கிறதா? இல்லையா? என்பதை பொலிஸாரினூடாக விசாரிக்கவும்"

Published By: Vishnu

08 Aug, 2018 | 03:44 PM
image

என்னிடம் ஆயுதம் இருக்கின்றதா? அல்லது இல்லையா? என்பதை சாவகச்சேரி பொலிஸாரினூடாக தகவல்களை பெற்று சபைக்கு சமர்ப்பிக்குமாறு நான் அவைத் தலைவரிடம் கடிதம் மூலமாக கோரிக்கையொன்றை முன்வைக்கப் போகின்றேன் என வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். 

மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் வெளியிட்ட கருத்தானது தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஆபத்து என்றும் இவ் விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் அனந்தி சசிதரன் சாவகச்சேரரி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார்.

இந் நிலையில் இது தொடர்பாக இன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்த அமைச்சர் அனந்தி சசிதரன் பொலிஸாருடனான சந்திப்பின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

1987 ஆம் ஆண்டு மாகாணசபைச் சட்டத்தின் பிரகாரம் சபையில் நடக்கும் விவகாரங்களுக்கு பொலிஸாரோ நீதிமன்றமோ நடவடிக்கை எடுக்க முடியாது என்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தை அவைத் தலைவர் பொலிஸாரிடம் வழங்கியுள்ளார். இதன் பிரகாரம் தம்மால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நான் நினைக்கின்றேன் அவைத்தலைவர் என்னிடம் ஆயுதம் இருக்கின்றாதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த ஒரு கோரிக்கையினை சாவகச்சேரி பொலிஸாரிடம் முன்வைப்பாராக இருந்தால் அது தொடர்பான விசாரணைகளை அவர்கள் செய்யத் தயாராக இருப்பார்கள். 

எனவே அடுத்தகட்ட நடவடிக்கையாக என்னிடம் ஆயுதம் இருக்கின்றதா? அல்லது இல்லையா? என்பதை சாவகச்சேரி பொலிஸாரினூடாக தகவல்களை பெற்று சபைக்கு சமர்ப்பிக்குமாறு நான் அவைத் தலைவரிடம் கடிதம் மூலமாக கோரிக்கையொன்றை முன்வைக்கப் போகின்றேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்...

2025-01-14 19:21:46
news-image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று...

2025-01-15 01:36:26
news-image

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு...

2025-01-14 19:58:50
news-image

இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக...

2025-01-14 19:39:54
news-image

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை...

2025-01-14 19:55:32
news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13