(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)
வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கும் சட்டமூலத்தின் சில விதிமுறைகள் அரசியல் அமைப்பிற்கு முரணானது என சாநாயகர் கருஜயசூரிய சபையில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று சபாநாயகர் அறிவிப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கும் சட்டமூலத்தின் சில விதிமுறைகள் அரசியல் அமைப்பிற்கு முரணானது. குறித்த விதிமுறை நிறைவேற்றப்படவேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அல்லது சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆகவே உயர் நீதின்மற தீர்ப்பின் பிரகாரம் சட்ட மூலத்தில் திருத்தங்கள் செய்து அரசியல் அமைப்பிற்கு உட்பட்டதாக மாற்றியமைத்தால் அதனை நிறைவேற்ற முடியும். அதேபோல் சட்ட மூலத்தில் ஏனைய விதிமுறைகள் சட்டமூலத்துக்கு முரணானது அல்ல எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM