(ஆர்.யசி)
தேசிய அரசாங்கத்தில் ஆளும் தரப்பாக பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சி பதவி வேண்டும் என்றால் அவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து குறித்து இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
பாராளுமன்றத்தில் வெவ்வேறு கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இதில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒரு தரப்பினர் எதிரணியில் அங்கம் வகிக்கின்றனர். எனினும் அவர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாகவே உள்ளனர். அவ்வாறு இருக்கையில் எதிர்க்கட்சி பதவியை தரக்கோருகின்றனர். ஆனால் இது சாத்தியமற்றதாகும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 23 பேர் அமைச்சரவையில் உள்ளனர். அரசாங்கத்தின் தீர்மானங்களை முன்னெடுக்கின்றனர். ஆகையால் அதே அணியை எதிர் கட்சியாக அங்கீகரிக்க கோருவது ஏற்றுகொள்ள முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM