மனித உரிமைகள் பற்றி பேசும் அரசாங்கத்திற்கு அடிப்படை உரிமைகளை மதிக்க தெரியவில்லை - ஜீ.எல்.பீரிஸ்

Published By: Raam

02 Mar, 2016 | 04:14 PM
image

இலங்கை கடற்பரப்பு மீதான இந்திய ஆக்கிரமிப்பிற்கு தீர்வு காணாது , அந்த நாடுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது  எவ்விதத்தில் நியாயப்படுத்த முடியும் என கேள்வியெழுப்பியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மனித உரிமைகள் தொடர்பில் பேசும் அரசாங்கத்திற்கு அடிப்படை உரிமைகளை மதிக்க தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் பேர்தே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் , 

அரசாங்கத்தின் செல்வாக்கு மக்கள் மத்தியில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக உரிமையாகும் . ஆனால் அரசாங்கம் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தாது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளது. இன்று 90 வீதத்திற்கும் அதிகமான உள்ளுராட்சி மன்றங்கள் முழு அளவில் செயழிழந்துள்ளது. இவ்வாறு ஜனநாயக ரீதியிலான நெருக்கடிகளை மக்கள் மீது பிரயோகித்து பாரிய பிரச்சனைகளை மூடி மறைக்கின்றது. 

எமது கடற்பரப்பிற்குள் அத்து மீறி நுழையும் இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களை தாக்கி விட்டு செல்கின்றனர். இந்தியாவின் இந்த அத்துமீறிய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள முடியாது அரசாங்கம் வலுவிழந்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க பொருளாதார மற்றும் தொழில் நுட்பத்தை மையப்படுத்திய இலங்கை - இந்திய கூட்டு ஒப்பந்தத்திற்கு கைச்சாத்திட முயற்சிப்பது எவ்வகையில் நியாயமாகும். இந்த கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை வெளியிட வில்லை. வெறும் வரைபில் கைச்சாத்திடுவதாகவே  அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட உள்ள கூட்டு ஒப்பந்தம் ஒன்றின் வரைபில் கைச்சாத்திடுவது என்பது அடுத்த நகர்வுகளுக்கு சட்ட ரீதியான அனுமதி வழங்குவதாகும். 

எனவே இந்த கூட்டு ஒப்பந்தம் எமது நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையாகும். இந்தியாவில் இருந்து அவசர அம்பியுலன்ஸ் சேவையை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர். இது அரசாங்கத்தின் தனியார்மயமாக்கும் நோக்கத்தின் வெளிப்பாடாகவே அமைகின்றது என அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:41:02
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:40:12
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43
news-image

தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை...

2025-11-07 17:13:16
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுக்...

2025-11-07 17:08:18
news-image

கிரான், பென்டுகால் பாலங்கள் அபிவிருத்திக்கு நிதி...

2025-11-07 17:09:47