அபிவிருத்தி திட்டத்திற்கு நிதி வழங்க மத்திய வங்கி  எந்நேரத்திலும் தயார் : மத்திய வங்கி ஆளுனர்

Published By: Priyatharshan

02 Mar, 2016 | 03:28 PM
image

(பா.ருத்ரகுமார்)

நாட்டின் அபிவிருத்தி திட்டத்திற்கென நிதி வழங்க மத்திய வங்கி  எந்நேரத்திலும் தயாராகவுள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த நிதி சாதாரண மக்களின் நலனுக்காக எந்தளவு தூரம் சென்றடைகின்றது எனபதில் பெரும் சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பல்தேசிய கம்பனிகளில் காணப்படும் வர்த்தக பொறிமுறைகளை விருத்தி செய்வதால் மட்டும் நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கான இலக்குகளை அடைய முடியாது. 

சிறு முயற்சியாளர்களை பாதுகாப்பதற்கான  சமூக மீள்கட்டுமான பொறிமுறைகள் புதிதாக உருவாக்கப்பட்டால் மட்டுமே இலக்குகளை அடைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக மூலாதாரங்களை விருத்தி செய்வதற்கான கட்டமைப்புக்களும் புதிய கண்டுபிடிப்புகளும் எனும் தொனிப்பொருளில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வர்த்தக பங்களிப்பை மேம்படுத்தவதற்கான புதிய  கொள்கைத்திட்டங்களை உருவாக்கவதற்காக தேசிய கலந்துரையாடல் கொழும்பில் அமைந்துள்ள மத்திய வங்கியின் தலைமை செயலகத்தின் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. 

இதன்போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37