வாள்வெட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டு யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்குமாறு சட்டத்தரணியும், மாகாண சபை உறுப்பினருமான கே.சயந்தன் கோரியுள்ளார்.
சாவகச்சேரியில் நேற்றுமுன் தினம் கைது செய்யப்பட்ட 7 இளைஞர்களையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று நேற்று உத்தரவிட்டிருந்தது.
7 இளைஞர்களை நேற்றுமுன்தினம் மானிப்பாய் பொலிஸார் கைது செய்திருந்தனர். அத்துடன் அவர்களிடமிருந்து 2 வாள்கள், ஒரு கோடாரி, ஒரு கைக் கோடாரி, செயின், இரும்புப் பைப், 3 உந்துருளிகளை மீட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த இளைஞர்களை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்றுக் காலை தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சட்டத்தரணியும், மாகாண சபை உறுப்பினருமான கே.சயந்தன் இளைஞர்கள் சார்பில் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி இருந்தார்.
விசாரணைகளின் பின்னர் இளைஞர்கள் மல்லாகம் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர். இளைஞர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சட்டத்தரணி சயந்தன், அவர்களைப் பிணையில் விடுவிக்குமாறு கோரியுள்ளார். எனினும் அவரது பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு 14 நாடகள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM