புலி­க­ளுக்கு எதி­ரான தடை ஆறு மாதங்­களால் நீடிப்பு

Published By: Vishnu

06 Aug, 2018 | 10:02 AM
image

ஐரோப்­பிய ஒன்றியமானது  தமி­ழீழ விடு­தலைப் புலி­களை தீவி­ர­வாத அமைப்­பொன்­றாக  பட்­டி­யல்­ப­டுத்­து­வதை  மேலும் 6  மாதங்­களால்  நீடித்­துள்­ளது.

தீவி­ர­வாத போராட்டம் தொடர்­பான கண்­ணோட்­டத்தைக் கொண்­டுள்ள தனி­ந­பர்கள் மற்றும் நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக வழி­ந­டத்­தப்­படும்   குறிப்­பிட்ட  கட்­டுப்­பா­டுகள்  தொடர்­பான ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின்  ஒழுங்கு விதி­களின் கீழேயே  ஜூலை 30  ஆம் திக­தி­யி­லான இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

விடு­தலைப் புலி­களால்  இலங்­கைக்கு தொடர்ந்து அச்­சு­றுத்தல் உள்­ளதை ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின்  28  நாடு­க­ளையும் நாம்  ஒரு­வாறு ஏற்­றுக்­கொள்ளச் செய்­துள்ளோம் என  பிரஸல்ஸ் நக­ரி­லுள்ள இலங்­கையின் தூதுவர்  ரொடனி பெரேரா தெரி­வித்தார்.

"பல வரு­டங்­க­ளுக்கு முற்­பட்ட தெளி­வாகப் புலப்­ப­டக்­கூ­டிய சான்­று­க­ளுடன்  கூடிய   புதுப்­பிக்­கப்­பட்ட ஆவ­ணங்­களை நாம் வைத்­தி­ருக்க வேண்­டிய  கடி­ன­மான பணி­யாக  அது இருந்­தது"  என அவர் கூறினார்.

தேவைப்­படும் தக­வல்­களை  தொகுக்கும் பணி  சட்ட அமு­லாக்கப் பிரி­வாலும்  கொழும்­பி­லுள்ள ஏனைய  முகவர் நிலை­யங்­க­ளாலும்  வெளி­நாட்டு அமைச்சின் மேற்­பார்­வையின் கீழ் மேற்­கொள்­ளப்­பட்­டது. எனத் தெரி­வித்த தூதுவர் பெரேரா, " அந்த வகையில் பிர­ஸல்­ஸி­லுள்ள  தூத­ரகம்  பிரஸல்ஸ் நகரில் ஒழுங்­கு­மு­றையில் கூடும்  ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களின் தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ரான நிபு­ணர்­களின்  கண்­ணோட்­டங்­க­ளுக்கு அமை­வான சரி­யான  முறையை அதி­கா­ரிகள் பின்­பற்­று­வதை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்­த­தா­கவும்   விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான தடைகள் தொடர்ந்து  பேணப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்த  ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின்  அனைத்து 28  நாடு­களைச் சேர்ந்த  பிர­தி­நி­தி­க­ளு­டனும்  ஒழுங்கு முறையில் தான் சந்­திப்பை மேற்­கொண்­ட­தா­கவும்  கூறினார்.

ஐரோப்­பிய சபை  இந்த வருடம் மார்ச் 21  ஆம்  திகதி  விடு­தலைப் புலி­களை  முதல் தட­வை­யாக தீவி­ர­வாத பட்­டி­யலில் மீள உள்­வாங்கி  தீவி­ர­வாத கண்­ணோட்­டத்தைக் கொண்ட தனி­ந­பர்கள் மற்றும் நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக  குறிப்­பிட்ட கட்­டுப்­பா­டு­களை  தொடர்ந்து விதிக்க  வழி­ந­டத்­தி­யி­ருந்­தது.

நீண்ட கால இரா­ஜ­தந்­திர போராட்­ட­மொன்றின் விளை­வாக மீளப் பட்­டி­யல்­ப­டுத்­தப்­பட்ட 20   அமைப்­புகள் மத்­தியில்  விடு­தலைப் புலி­க­ளது   பெயர்  இடம்­பி­டித்­துள்­ளது.  

விடு­தலைப் புலிகள் அமைப்பு 2006  ஆம் ஆண்டில்  தீவி­ர­வாத இயக்­க­மாக முதன்­மு­த­லாக  அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு இன்று வரை அவ்­வாறே உள்­ளது.   இந்­நி­லையில் அந்தக் குழு­வினர் மேற்­படி ஆரம்ப பட்­டி­ய­லுக்கு  எதி­ராக  சவால் விடுக்கும் நட­வ­டிக்கை எதிலும் ஈடு­ப­ட­வில்லை.  ஆனால் பின்னர்  அந்த அமைப்பு   இந்த விவ­கா­ரத்தை   ஐரோப்­பிய பொது நீதி­மன்­றத்தின் முன்­பாக   கொண்டு சென்­றது.

இந்­நி­லையில் 2014  ஆம் ஆண்டு  ஐரோப்­பிய பொது நீதி­மன்றம்  விடுதலைப் புலிகள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை  வலிதற்றதாக்கியிருந்தது.  எனினும்  அதனை எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளுக்கான நிதிகளை  முடக்குவதை சாத்தியமாக்கும் வகையில்  அது தொடர்பான மேன்முறையீடுகள்  தொடர்பான முடிவுகள் வரை  பேண அது தீர்மானித்திருந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51