வலி கிழக்கில் மக்கள் பங்கேற்புடன் சிரமதானம்

Published By: Digital Desk 4

05 Aug, 2018 | 12:37 AM
image

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை சனசமூக நிலையங்களை இணைந்து சிரமதான முயற்சிகளை கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது. 

அந்த வகையில் முதற்கட்டமாக புத்தூர் கலைமதி சனசமூக நிலையத்தின் சுகாதாரக் குழுவுடன் இணைந்து சுன்னாகம் - புத்தூர் வீதியின் இருமருங்கிலும் காணப்படும் பற்றைகளை சிரமதானப் பணிகள் மூலம் துப்புரவு செய்யப்பட்டுள்ளன.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் கலைமதி சனசமூக நிலையத்தின் சுகாதாரக்குழு உறுப்பினர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள், வெளிவாரி பணியாளர்கள் ஆகியோர் இச் சிரமதான முயற்சிகளில் பங்கேற்றனர்;. 

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் கடந்த அமர்வில் வீதிகளின் இருமருங்கிலும் துப்புரவு, மற்றம் பாதீனிய செடி ஒழிப்புத் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் இராமநாதன் ஐங்கரனினால் கேள்வி எழுப்பபப்பட்டது. 

இவ் வினாவிற்குப் பதிலளித்த தவிசாளர் 'வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையானது யாழில் காணப்படும் ஏனைய பிரதேச சபைகளைக் காட்டிலும் மூன்று மடங்கு நிலப்பரப்பினைக் கொண்டுள்ளது. அவ்வாறு காணப்படும் பல பகுதிகளின் வீதியோரங்கள் தனியே பிரதேச சபையின் மட்டுப்படுத்தப்பட்ட ஆளணி மற்றும் வளங்களுடன்  துப்புரவு செய்யப்பட முடியாத நிலை காணப்படுகின்றது. 

இந் நிலையில் நாம் சனசமூக நிலையங்களை உள்வாங்கி மக்கள் பங்கேற்புடனான சிரமதானத்தினை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்வதாக' உத்தரவாதமளித்திருந்தார்.

இச் சபை அமைந்த பின்னர் சில உறுப்பினர்கள் ஏற்கனவே சிரமதான முயற்சிகளுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் அவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் பிரதேச சபையின் வெளிவாரி பணியாளர்கள் தினமும் ஏதோ ஒருபகுதியைச் சுத்தம் செய்துவருகின்றனர். 

சுமார் 104 சதுரக் கிலோ மீற்றருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் சபை உறுப்பினர்கள் மேலும் சிரமதானங்களை ஒழுங்கமைக்கும் பட்சத்தில் அதனை தான் வரவேற்பதுடன் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவதாக தவிசாளர் கேட்டுக்கொண்டார்.

இதனடிப்படையில் கதிர்த்திகேசு கதிர்காமநாதன் தன்னுடைய ஒழுங்கமைப்பின் கீழ் கலைமதி சனசமூக நிலையத்தின் கீழ் இயங்கும் சுகாதாரக்குழுவினர் முன்னுதாரணமாக புத்தூர் சுன்னாகம் வீதிப்பகுதியில் சிரமதானத்தினைச் செய்ய முன்வருவதாக சபையில் விருப்பம் தெரிவித்திருந்தார். 

இவ்வாறாக மக்கள் பங்கேற்புடன் சிரமதான முயற்சிகள் இடம்பெறுவதை பலரும் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு செல்லும் அளவுக்கு...

2023-10-03 19:23:40
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம்...

2023-10-03 17:28:52
news-image

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக...

2023-10-03 20:06:33
news-image

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை...

2023-10-03 20:29:45
news-image

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை...

2023-10-03 16:09:19
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மஹரகம சீதாவின்...

2023-10-03 19:43:02
news-image

தடைப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப்...

2023-10-03 16:44:05
news-image

நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும்...

2023-10-03 16:43:14
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அழுத்தம்...

2023-10-03 16:07:36
news-image

இ.தொ.கா. உப தலைவர் திருகேஸ் செல்லசாமியின்...

2023-10-03 18:40:12
news-image

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கெடுத்த...

2023-10-03 19:30:42
news-image

வரவு - செலவுத் திட்டத்துக்கு பின்...

2023-10-03 16:42:15