(ஆர்.யசி)
ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவாடும் சுதந்திரக் கட்சியுடன் பயணிக்க முடியாதுள்ளது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனான உறவையும் முறிக்க வேண்டிய நிலையில் இன்று அவர்கள் செயற்படுகின்றனர் என பொது எதிரணி உறுப்பினராக அடையாளப்படுத்தும் சுயாதீன அணியின் உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
மஹிந்த யாரை எதிர்க்கட்சி தலைவராக்குகின்றாரோ அவருடன் இணைந்து ஆட்சியை வீழ்த்தும் முயற்சிகளை முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொது எதிரணியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்க்கட்சியாக செயற்படும் முயற்சிகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக நாம் இணைந்து தனி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என கடந்த மூன்று ஆண்டுகளாக முயற்சிகளை எடுத்தோம். எனினும் கடந்த மூன்று ஆண்டுகளில் 16 பேரை மாத்திரமே எம்முடன் இணைக்க முடிந்துள்ளது. இப்போதுள்ள நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் இடையில் விரிசல் நிலைமையே ஏற்பட்டு வருகின்றது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் இனிமேலும் எம்முடன் இணைவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். ஆகவே அவர்களுக்கு இனியும் நிலைமைகளை எடுத்துரைக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடு. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிக்கும் வரையில் எம்மால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக பயணிக்க முடியாது.
நாம் 70 பேர் கொண்ட பலமான சக்தியாக உள்ளோம். இந்த அரசாங்கம் கலையும் வரையில் நாம் எதிர்க்கட்சியாக செயற்பட தீர்மானம் எடுத்துள்ளோம். அதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். சபாநாயகரை சந்தித்து எமது நியாயங்களை எடுத்துரைத்து எழுத்து மூல கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம். அடுத்த பாராளுமன்ற அமர்வுகளின் போது எமது கோரிக்கைக்கான பதிலை சபாநாயகர் முன்வைப்பார். எவ்வாறு இருப்பினும் எமது 70 பேர் கொண்ட அணியே எதிர்க்கட்சியாக செயற்படும். எம்மில் யார் எதிர்க்கட்சி தலைவர் என்பதையும் மஹிந்த ராஜபக் ஷ தீர்மானிப்பார். அவர் யாரை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கின்றாரோ அவரையே நாமும் ஏற்றுக்கொள்வோம்.
நாம் அனைவரும் பொதுவான நோக்கத்தில் அரசியல் அணியாக ஒன்றிணைந்துள்ள நிலையில் எமக்குள் அதிகார போட்டி இல்லை. அனைவரும் இணைந்து அடுத்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளது. மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் பலமான அரசாங்கத்தை அமைக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை வீழ்த்த வேண்டும். அதற்காக எம்முடன் இணைந்து செயற்பட விரும்பும் அனைவருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
அதே போல் எமது அணியினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டிக்கொண்டு அரசியல் செய்ய நினைத்தால் அதன் பின்னர் அவர்களுக்கும் அரசியல் வாழ்க்கை இல்லாது போய்விடும். மக்கள் நிலைப்பாடு என்ன என்பதை உணர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் செயற்பட வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவுடன் மட்டுமே எமது பயணம் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM