தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி முறியடிப்பு

Published By: Digital Desk 4

31 Jul, 2018 | 05:36 PM
image

முல்லைத்தீவு  கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணிக்கு அப்பாலுள்ள தமிழர்களின் பூர்வீக பகுதியான சிவந்தா முறிப்புக்குளம் மற்றும் அதனோடிணைந்த வயல் நிலங்களை அபகரிக்கும் முயற்சி நேற்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில். சிவந்தா முறிப்புக்குளம் மற்றும் அதனோடு இணைந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான வயல் நிலங்களை சிங்கள மக்கள் சிலர் அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினர் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனுக்கும், முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினருக்கும் தெரியப்படுத்தியிருந்தனர்.

உடனடியாக குறித்த இடத்திற்குச் சென்ற வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் திரு.கிருசுணன் – ஜெகன்நாத் மற்றும் திணைக்கள பணியாளர்களும் சென்று இந்த அபகரிப்புச் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தினர்.

மேலும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளருக்கும் இது தொடர்பில் தொலைபேசியில் ரவிகரனால் தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன் குறித்த இடத்திற்கு கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் திரு.இ.பிரதாபன், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய திட்ட முகாமையாளர் திரு.வி.கே.பி.ஜெயநாத ஆகியோரும் குறித்த இடத்திற்கு வருகைதந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் 29  ஆம் திகதி குறித்த பகுதிக்கு வடக்குமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் நேரடியாக சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்து அபகரிப்பு நடவடிக்கையை நிறுத்துமாறு தெரிவித்திருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49