யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வரை கட்டிவைத்து அடிக்க முடியாது என்கிறார் முதல்வர் ஆர்னோல்ட்

Published By: Priyatharshan

31 Jul, 2018 | 03:22 PM
image

யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வரை கட்டிவைத்து என்னால் அடிக்க முடியாது என யாழ். மாநகர சபையின் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். 

யாழ்.மாநகர சபையின் கூட்டம் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. 

அதன் போது நடைபெற்ற விவாதம் ஒன்றில் பிரதி முதல்வர் எதிர்க்கட்சி உறுப்பினர் மணிவண்ணன் விகிதாசார உறுப்பினர் என கூறி அவரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார். 

அதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து , அவரின் கருத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும், விகிதாசார உறுப்பினர் என ஒருவரை குறிப்பிட்டுக் கூறும் போது இந்த சபையில் உள்ள 18 விகிதாசார உறுப்பினர்களையும் அது குறிக்கும் எனவும் , சபை உறுப்பினர்களை கௌரவம் இன்றி பேச முடியாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அதற்கு முதல்வர் தான் அந்த கருத்தை அறிக்கையில் இருந்து நீக்கி விடுகிறேன் என அறிவித்தார். அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் உடன்படவில்லை. பிரதி முதலவர் சபையில் எழுந்து நான் அந்த கருத்தை வாபஸ் பெறுகிறேன் எனக் கூற வேண்டும் என தெரிவித்தார்கள். 

அதனை அடுத்து முதல்வர் , பிரதி முதல்வரிடம் குறித்த கருத்தை வாபஸ் பெறுங்கள் எனக் கேட்டார். அதற்கு பிரதி முதல்வர் தான் கருத்தை வாபஸ் பெற மாட்டேன் என ஆணித்தரமாக கூறி அமர்ந்தார். 

அதனை தொடர்ந்து சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பிரதி முதல்வரின் கருத்து இந்த சபையில் விகாதாசார முறைமையில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். 

அதற்கு முதல்வர் தன்னால் என்ன செய்ய முடியும். பிரதி முதல்வர் தன் கருத்தை வாபஸ் பெற முடியாது என கூறுகின்றார். கருத்தை வாபஸ் பெறு என கட்டி வைச்சு அடிக்கவா முடியும் என அப்பாவித்தனமாக சபையில் கேட்டார். 

அதனை அடுத்து எழுந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் செல்வவடிவேல் , இந்த சபையில் உள்ள அனைவரும் உறுப்பினர்களே,  இங்கே விகிதாசார முறைமையில் தெரிவு செய்யப்பட்டவர்களை அவமதிக்குமாறு சக உறுப்பினர் தெரிவிக்கும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார். 

அத்துடன் மேலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பிரதி முதல்வரின் கருத்துக்கு எதிர்ப்புக்களை தெரிவித்தனர். 

கடுமையான எதிர்ப்பு சபையில் எழுந்ததால் இறுதியில் பிரதி முதல்வர் எழுந்து தனது கருத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். 

அதேவேளை ஆளும் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பில் விகிதாசார முறைமையில் தெரிவான உறுப்பினர்கள் எந்த விதமான கருத்தையும் தெரிவிக்காது மௌனம் காத்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27