(நா.தினுஷா)
புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் க.பொ.த. உயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஆகவே பரீட்சைகளில் பங்குபற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
பரீட்சை நிலையங்களில் இடம்பெறும் ஊழல்களை கட்டுப்படுத்துவதற்கென விசேட கண்காணிப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை நிலையங்களில் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட தொழில்நுட்பப் பொருட்களை பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் பரீட்சை ஒழுங்குகளை மீறுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 5 ஆம் திகதி தரம்–5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கென நாடு முழுவதும் 3,050 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன் அன்று நாள் முழுவதும் பரீட்சை கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. பரீட்சைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் 2,268 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM