இன்று முதல் தடை செய்யப்படுகிறது மேலதிக வகுப்புகள்

Published By: Vishnu

31 Jul, 2018 | 08:46 AM
image

(நா.தினுஷா)

புல­மைப்­ப­ரிசில் பரீட்சை எதிர்­வரும் 5 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ள­துடன் க.பொ.த. உயர்­த­ரப்­ப­ரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்­டம்பர் மாதம்  முதலாம் திக­தி­ வரை நடை­பெ­ற­வுள்­ளது. ஆகவே பரீட்­சை­களில் பங்­கு­பற்றும் மாண­வர்­க­ளுக்­கான மேல­திக வகுப்­புக்கள்  மற்­றும் கருத்­த­ரங்­கு­களை  நடத்­து­வ­தற்கு இன்று முதல் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ள­தாக பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் சனத்  பூஜித் தெரி­வித்­துள்ளார்.  

பரீட்சை நிலை­யங்­களில் இடம்­பெறும் ஊழல்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கென விசேட கண்­கா­ணிப்புக்குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பரீட்சை நிலை­யங்­களில் கைய­டக்கத் தொலை­பேசி உள்­ளிட்ட தொழி­ல்நுட்பப் பொருட்­களை பயன்­ப­டுத்­து­வ­தற்குத்  தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ள­துடன்  பரீட்சை  ஒழுங்­கு­களை மீறு­கின்றவர்கள்  மீது  நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெ­னவும்  அவர்  குறிப்­பிட்­டுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, 

புல­மைப்­ப­ரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்­தரப் பரீட்சை  மாண­வர்­க­ளுக்­கான  மேல­திக வகுப்­புக்கள் மற்றும் கருத்­த­ரங்­கு­களை நடத்­து­வ­தற்கு இன்று  முதல் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. 

எதிர்­வரும் 5 ஆம் திகதி தரம்–5 மாண­வர்­க­ளுக்­கான புல­மை­ப்ப­ரிசில்  பரீட்சை  நடை­பெ­ற­வுள்­ளது. புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையை நடத்­து­வ­தற்­கென நாடு முழுவதும் 3,050 பரீட்சை நிலை­யங்கள்  நிறு­வப்­பட்­டுள்­ள­துடன்  அன்று நாள்  முழு­வதும் பரீட்சை  கண்­கா­ணிப்பு  நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும். 

ஆகஸ்ட் மாதம்  6  ஆம் திகதி முதல் செப்­டம்பர் மாதம்  முதலாம்  திகதி வரை க.பொ.த.  உயர்­தரப் பரீட்­சைகள் இடம்­பெ­ற­வுள்­ளன.  பரீட்­சை­களை  நடத்­து­வ­தற்­கான  நட­வ­டிக்­கைகள் அனைத்தும்  முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­துடன்  2,268 பரீட்சை  நிலை­யங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38