(எம்.ஆர்.எம்.வஸீம்)
அமைச்சரவையின் பூரண ஆதரவுடனேயே மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானித்தார். அத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி ஒருபோதும் அடிபணியமாட்டார் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
நாட்டுக்குள் போதைப்பொருட்கள் அதிகரித்துள்ளதாகவும் சிறைச்சாலைகளுக்குள் இருந்தே போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகள் வழிநடத்தப்படுவதாக புலனாய்வு தகவல் கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி அமைச்சரவையில் தெரிவித்திருந்தார்.
அதனால் இதனை கட்டுப்படுத்துவதாக இருந்தால்,சிறைச்சாலைகளில் இருந்து வழிநடத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதற்காக போதைப்பொருள் நடவடிக்கைகளில் கைதுசெய்யப்பட்டு மரண தண்டனை தீர்ப்பாக்கப்பட்ட பின்னரும் சிறைச்சாலைக்குள் இருந்துகொண்டு இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டுமென ஜனாதிபதி அமைச்சரவையில் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்த தீர்மானத்துக்கு அன்று அமைச்சரவையில் இருந்த யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.மரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். தற்போது யாரும் மரண தண்டனை தொடர்பாக விமர்சிப்பதாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் இதுதொடர்பாக வேறுபட்ட கருத்துடையவர்கள் இருக்கலாம். என்றாலும் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டால் அதனை பாதுகாத்துக்கொள்வது அமைச்சரவையில் இருக்கும் அனைவரதும் கூட்டுப்பொறுப்பாகும்.
மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை விரைவாக நிறைவேற்றுமாறு எழுத்துமூலம் சிலர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர். அதேபோன்று இதனை நிறைவேற்றக்கூடாது என சிலர் தெரிவித்துள்ளனர்.என்றாலும் அதிகமானவர்களின் நிலைப்பாடாக இருப்பது மரண தண்டனையை நிறைவேற்றவேண்டும் என்பதாகும்.அத்துடன் மரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்துக்கு ஜனாதிபதிக்கு சர்வதேச ரீதியில் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக சிலர் தெரிவிக்கின்றனர். இதற்கு ஜனாதிபதி அண்மையில் பதில் அளித்திருந்தார்.அதனால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி சர்வதேச அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டார். ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது தொடர்பாக கேள்வி எழுப்பினால் எமது நாட்டின் நிலைமையை தெளிவுபடுத்த முடியும்.
சர்வதேச ரீதியில் 54 நாடுகளில் தண்டனை சட்டம் நிறைவேற்றப்படு கின்றது.29நாடுகளில் சட்டம் அமுலில் இருந்தாலும் எமது நாடுபோன்று தண் டனையை நிறைவேற்றுவதில்லை.105 நாடுகளில் தண்டனைச்சட்டம் முற்றாக நீக்கப்ப ட்டுள்ளது.எமது நாட்டுக்கு அண்மை நா டான இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றது.நாட்டினதும் நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதியுமே ஜனாதிபதி மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானித்திருக்கின்றார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM