"சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி அடிபணியமாட்டார்"

Published By: Vishnu

26 Jul, 2018 | 07:54 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

அமைச்சரவையின் பூரண ஆதரவுடனேயே மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானித்தார். அத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி ஒருபோதும் அடிபணியமாட்டார் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

நாட்­டுக்குள் போதைப்­பொ­ருட்கள் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் சிறைச்­சா­லை­க­ளுக்குள் இருந்தே போதைப்­பொருள் வியா­பார நட­வ­டிக்­கைகள் வழி­ந­டத்­தப்­ப­டு­வ­தா­க புல­னாய்வு தகவல் கிடைத்­தி­ருப்­ப­தா­கவும்  ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வையில் தெரி­வித்­தி­ருந்தார். 

அதனால் இதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக இருந்தால்,சிறைச்­சா­லை­களில் இருந்து வழி­ந­டத்­து­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். அதற்­காக போதைப்­பொருள் நட­வ­டிக்­கை­களில் கைது­செய்­யப்­பட்டு மரண தண்­டனை தீர்ப்­பாக்­கப்­பட்ட பின்­னரும்  சிறைச்­சா­லைக்குள் இருந்­து­கொண்டு இந்த நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டு­மென ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வையில் தெரி­வித்­தி­ருந்தார்.

 ஜனா­தி­ப­தியின் இந்த தீர்­மா­னத்­துக்கு அன்று அமைச்­ச­ர­வையில் இருந்த யாரும் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை.மரண தண்­ட­னையை நிறை­வேற்றும் தீர்­மா­னத்தை அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டனர். தற்­போது யாரும் மரண தண்­டனை தொடர்­பாக விமர்­சிப்­ப­தாக இருந்தால் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அத்­துடன் இது­தொ­டர்­பாக வேறு­பட்ட கருத்­து­டை­ய­வர்கள் இருக்­கலாம். என்­றாலும் அமைச்­ச­ர­வையில் தீர்­மானம் எடுக்­கப்­பட்டால் அதனை பாது­காத்­துக்­கொள்­வது அமைச்­ச­ர­வையில் இருக்கும் அனை­வ­ரதும் கூட்­டுப்­பொ­றுப்­பாகும்.

மரண தண்­ட­னையை நிறை­வேற்றும் ஜனா­தி­ப­தியின் இந்த தீர்­மா­னத்தை விரை­வாக நிறை­வேற்­று­மாறு எழுத்­து­மூலம் சிலர் ஜனா­தி­ப­திக்கு அறி­வித்­துள்­ளனர். அதே­போன்று இதனை நிறை­வேற்­றக்­கூ­டாது என சிலர் தெரி­வித்­துள்­ளனர்.என்­றாலும் அதி­க­மா­ன­வர்­களின் நிலைப்­பா­டாக இருப்­பது மரண தண்­ட­னையை நிறை­வேற்­ற­வேண்டும் என்­ப­தாகும்.அத்­துடன் மரண தண்­ட­னையை நிறை­வேற்றும் தீர்­மா­னத்­துக்கு ஜனா­தி­ப­திக்கு சர்­வ­தேச ரீதியில் அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வ­தாக  சிலர் தெரி­விக்­கின்­றனர். இதற்கு ஜனா­தி­பதி அண்­மையில் பதில் அளித்­தி­ருந்தார்.அதனால் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வதில் ஜனா­தி­பதி சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு ஒரு­போதும் அடி­ப­ணி­ய­மாட்டார். ஜெனிவா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் இது தொடர்­பாக கேள்வி எழுப்­பினால் எமது நாட்டின் நிலை­மையை தெளி­வு­ப­டுத்த முடியும்.

சர்­வ­தேச ரீதியில் 54 நாடு­களில் தண்­டனை சட்டம் நிறை­வேற்­றப்­ப­டு கின்­றது.29நாடு­களில் சட்டம் அமுலில் இருந்­தாலும் எமது நாடுபோன்று தண் டனையை நிறைவேற்றுவதில்லை.105 நாடுகளில் தண்டனைச்சட்டம் முற்றாக நீக்கப்ப ட்டுள்ளது.எமது நாட்டுக்கு அண்மை நா டான இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றது.நாட்டினதும்  நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதியுமே ஜனாதிபதி மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானித்திருக்கின்றார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02