"வெள்ளை யானைகளையே இந்தியா, சீனாவுக்கு குத்தகைக்கு விடுகின்றோம்"

Published By: Vishnu

25 Jul, 2018 | 04:26 PM
image

(நா.தனுஜா) 

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் என்பன வெறுமனே வெள்ளை யானைகளாகவே உள்ளன. அவற்றால் எவ்வித வருமானமும் இல்லாத ஒரு நிலையிலேயே அதனை சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு குத்தகைக்கு வழங்குகின்றோம் என அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீனா மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையில் ராஜதந்திர ரீதியிலான முறுகல்நிலை இருந்துவரும் நிலையில் சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் இந்தியாவுக்கு மத்தள விமான நிலையத்தையும் வழங்குவதன் மூலம் இராஜதந்திர நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

மேலும் எதுவித வருமானங்களுமின்றி காணப்பட்ட சொத்துக்களை அந்நாடுகளுக்கு வழங்குவதன் மூலம் அனுகூலம் பெறமுடியும். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலமான வருமானத்தை சீனா பெற்றுக்கொண்டாலும் அதற்கான வரி மற்றும் செலாவணி வருமானம் என்பன இலங்கைக்கு உரியதாகையால் ரூபாவின் பெறுமதி உயர்வடையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58