வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இந்திய பிரஜை கைது

Published By: Daya

25 Jul, 2018 | 11:48 AM
image

(இரோஷா வேலு) 

வெளிநாட்டு மதுபான போத்தல்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயற்சித்த இந்திய பிரஜையொருவர் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

குறித்த சம்பவத்தில் 27 வயதுடைய இந்திய பிரஜையொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் சட்டவிரோதமான முறையில் அனுமதிபத்திரம் பெற்றுக்கொள்ளாமல் வெளிநாட்டு மதுபான போத்தல்களை இலங்கைக்குள் கடத்த முயற்சித்துள்ளார். 

இவர் நேற்று  காலை 9 மணியளவில் இவ்வாறு ஒரு லீற்றர் நிறையுடைய 12 வெளிநாட்டு மதுபான போத்தல்கள்களுடன் பொலிஸாரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட குறித்த நபரை இன்று காலை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளையில் நீதவான் அவரை 12000 ரூபா அபராதம் விதித்து விடுவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02