தாய்லாந்து குகையொன்றில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறார்களில் 11 பேர் பௌத்த துறவிகளாக தற்காலிகமாக துறவறம் பூணவுள்ளனர். அதேவேளை அவர்களின் பயிற்றுநரான 25 வயது இளைஞர் முழுமையான பிக்குவாக துறவறம் பூணவுள்ளார். இது தொடர்பான வைபவம் இன்று நடைபெறவுள்ளது.
தாய்லாந்தின் வைல்ட் போவர் எனும் 16 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும் பயிற்றுநரும் தாம் லுவாங் எனும் குகைக்குள் கடந்த ஜூன் 23 ஆம் திகதி நுழைந்த பின்னர் வெள்ளம் காரணமாக வெளியே வர முடியாமல் தவித்தனர். 9 நாட்களின் பின் கடந்த 2 ஆம் திகதி பிரித்தானிய சுழியோடிகளால் கண்டுபிடிக்கப்பட்டனர். அதன்பின் 13 பேரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், மேற்படி சிறுவர்களில் 11 பேர் தற்காலிகமாக துறவிகளாவதற்குத் தீர்மானித்துள்ளனர். மேற்படி சிறுவர்கள் 11 முதல் 16 வயதுக்குட்பட்டவர்களாவர்.
இவர்கள் துறவறம் பூணும் வைபவம் இன்று புதன்கிழமை நடைபெறும் என சியாங் கராய் மாகாணத்தின் ஆளுநர் பர்சோன் பிரத்சகுல் தெரிவித்துள்ளார்.
குகையிலிருந்து மீட்கப்பட்ட மற்றொரு சிறுவன் பௌத்தர் அல்லாத காரணத்தால் அவர் இதில் பங்குபற்றவில்லை எனவும் ஆளுநர் பிரத்சகுல் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்திலுள்ள பௌத்த ஆண்கள் தமது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் துறவறம்; பூணுவது,பெரும்பாலும் தற்காலிகமாக பாரம்பரியமாகவுள்ளது.
இச்சிறுவர்கள் பல்வேறு ஆச்சிரமங் களில் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை 9 நாட்கள் தங்கியிருந்து தியானத்திலும் வழிபாடுகளிலும் ஈடுபடுவர் என அறி விக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM