2020 வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை - மஹிந்தானந்த

Published By: Vishnu

23 Jul, 2018 | 04:45 PM
image

(நா.தினுஷா) 

அரசாங்கத்துக்கு தோல்வி பயம் இருப்பதனால் மகாண சபை தேர்தலை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை நடத்தாமல் விடக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சி மாகாணசபை தேர்தல்களை விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலேயே நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. அதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி கலப்பு முறையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று விரும்புகிறது. இவ்வாறான முரண்பாடுகள்  தொடர்ந்தும் நீடிக்குமாயின் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது சாத்தியமற்றதாகவே இருக்கும். 

மேலும் தோல்வி பயம் காரணமாகவே அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் தாமதித்துக் கொண்டு வருகின்றது. அரசாங்கக் கட்சிகளுக்கு இன்னமும் தோல்வி பயம் இருப்பதால் இத் தேர்தல்களை 2020 வரை நடத்தாமல் விடக்கூடிய சாத்தியமும் காணப்படுகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்கிஸ்சை பகுதியில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான...

2026-05-17 13:22:18
news-image

நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் பொலிஸ் பதவி...

2026-05-17 12:53:28
news-image

நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா 2026:...

2026-05-17 12:47:10
news-image

இளம் வயதிலேயே சிறுமிகள் கப்பிணிகளாக மாறும்...

2026-05-17 12:35:04
news-image

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகள்...

2026-05-17 12:30:15
news-image

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவில்...

2026-05-17 12:29:33
news-image

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் ஆரம்பம்!

2026-05-17 12:15:25
news-image

எலி காய்ச்சல் மற்றும் இரத்தப் புற்றுநோய்...

2026-05-17 11:54:31
news-image

மட்டு. கல்லடி பால வாவியில் ஆண்...

2026-05-17 11:29:04
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான...

2026-05-17 11:11:26
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

2026-05-17 11:07:47
news-image

தொழில்நுட்பத் தவறால் 656 மில்லியன் ரூபாய்...

2026-05-17 10:59:02