விக்கியே குழப்ப நிலைக்கு காரணம் - சுமந்திரன்

Published By: Vishnu

22 Jul, 2018 | 07:59 AM
image

(ரி.விரூஷன்)

வடக்கு மாகாண சபையில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அமைச்­ச­ரவை தொடர்­பான பிரச்­ச­னைக்கு நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பை அப்­ப­டியே அமுல்­ப­டுத்­தினால் தீர்­வு­காண முடியும் என தெரி­வித்­துள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் வேண்­டு­மென்றே விளங்­க­வில்லை என்­பது போல பாசாங்கு செய்­வது தான் குழப்ப நிலைக்கு காரணம் எனவும் தெரி­வித்தார்.

மேலும் மாகாண சபையில் பேசப்­படும் விட­யங்கள் தொடர்­பாக எவரும் விமர்­சிக்­கவோ அல்­லது விசா­ரணை செய்­யவோ அதி­காரம் கிடை­யாது எனவும் அவர் தெரி­வித்தார்.

யாழ்.சாவ­கச்­சே­ரியில் நேற்­றைய தினம் காலை இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டு செய்­தி­யா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

கேள்வி: யாழ்ப்­பா­ணத்தில் அண்­மைக்­கா­ல­மாக வன்­முறைச் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துள்­ளன. இந்­நி­லையில் அண்­மையில் சட்ட ஒழுங்கு அமைச்சர், பொலிஸ்மா அதிபர் ஆகியோர் வந்து சென்ற பிறகும் அந்த நிலைமை நீடிக்­கின்­றதே ?

பதில்: இச் சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்த மாகாண சபைக்கு சட்ட ஒழுங்­கா­னது முறை­யாக பகி­ரப்­பட வேண்டும். அத்­தோடு இப் பிர­தே­சத்­தி­லுள்ள பொலிஸார் இப் பிர­தே­சத்­திற்­கு­ரிய மொழி­யினை சொந்த மொழி­யாகக் கொண்­ட­வர்­க­ளாக இருக்க வேண்டும். அவ்­வாறு இல்லை என்றால் இச் சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது மிகக் கடி­ன­மா­ன­தாகும்.

அந்த நிலைமை ஏற்­படும் வரையில் நாம் பார்த்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது. சட்ட ஒழுங்கு அதி­கா­ரத்தை கைகளில் வைத்­தி­ருக்­கின்ற மத்­திய அர­சா­னது விரைந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்­பாக நாம் கடு­மை­யான அழுத்­தங்­களை பிர­யோ­கித்து வரு­கின்றோம். அத­னா­லேயே சட்ட ஒழுங்கு அமைச்சர் யாழ்ப்­பாணம் வந்தார் .

இவ் வன்­முறைச் சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பாக நாம் யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தரும் பிர­த­ம­ரு­டனும் பேச­வுள்ளோம்.

கேள்வி: வடக்கு மாகாண சபையின் அமைச்­ச­ரவை தொடர்­பாக நீதி­மன்றம் கட்­ட­ளை­யொன்றை வழங்­கிய பின்­னரும் தொடர்ந்தும் பிரச்­சினை காணப்­ப­டு­கின்­றதே ?

பதில்: நீதி­மன்றம் வழங்­கிய கட்­ட­ளையில் எந்தப் பிரச்­சினையும் இல்லை. அக் கட்­ட­ளையை அப்­ப­டியே அமுல்­ப­டுத்­தினால் சுமூ­க­மான மாகாண சபை ஆட்­சியை நடத்த முடியும். ஆனால் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் அதனை வேண்­டு­மென்றே விளக்­க­மில்லை என்­பது போல பாசாங்கு செய்து அதனை அமுல்­ப­டுத்­தா­மை­யா­லேயே தற்­போது குழப்ப நிலை நீடிக்­கின்­றது.

கேள்வி: வடக்கு மாகாண பெண் அமைச்சர் ஒருவர் கைத் துப்­பாக்கி வைத்­தி­ருப்­ப­தாக உறுப்­பினர் அஸ்மின் கூறிய நிலையில் அது தொடர்­பாக அப்பெண் அமைச்சர் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளாரே ?

பதில்: மாகாண சபையில் பேச்சு சுதந்திரம் இருப்பதாக சட்டத்தில் கூறப்படுகின்றது. இந்நிலையில் மாகாண சபையில் பேசப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக எவருக்கும் விமர்சிக்கவோ அல்லது விசாரிக்கவோ அதிகாரம் கிடையாது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53