சகோதரியைத் தாக்கிவிட்டு சகோதரன் தற்கொலை

Published By: Priyatharshan

19 Jul, 2018 | 03:20 PM
image

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் 21 வயதுடைய இளைஞன் தனது சகோதரியின் மீது கூரிய ஆயுதமொன்றினால் தாக்கிவிட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 வாழைச்சேனை கண்ணகிபுரத்தினை சேர்ந்த துரைராசா பிரதீபன் என்பவரே நேற்று புதன் கிழமை (18) மாலை இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கண்ணகிபுரத்தினை சேர்ந்த குறித்த நபர் நேற்று முன்தினம் மாலை பேத்தாழையிலுள்ள தமது உடன் பிறவா சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்த வேளையிலேயே சகோதரியின் வீட்டுக் கூரையில் அங்கிருந்த படுக்கை விரிப்பினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 அதேவேளை சகோதரியினை கத்தியினால் வெட்டி காயத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் தமது துவிச்சக்கர வண்டியினையும் கையில் வைத்திருந்த கத்தியினால் அடித்து சேதப்படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்திற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கல்குடா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறப்பு அதிரடிப்படையினரால் ரூ.35 மில்லியன் மதிப்புள்ள...

2025-06-20 19:29:53
news-image

மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-06-20 18:44:35
news-image

முதலீடுகளை ஈர்ப்பதற்கு புதிய வழிமுறையில் கவனம்...

2025-06-20 18:31:53
news-image

புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதிவேண்டும்-செம்மணியில் போராட்டம்

2025-06-20 20:04:10
news-image

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்:...

2025-06-20 18:25:28
news-image

கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த சந்தேக...

2025-06-20 17:37:13
news-image

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர் தம்புத்தேகம மத்திய...

2025-06-20 17:47:41
news-image

முல்லைத்தீவு- உடையார்கட்டில் காலாவதியான பொருட்கள் விற்பனை...

2025-06-20 17:47:04
news-image

சட்டவிரோத தொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தல் தொர்பான...

2025-06-20 17:18:43
news-image

தேசபந்து தென்னக்கோன் சார்பில் 28 சாட்சியாளர்கள்...

2025-06-20 17:13:06
news-image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன்...

2025-06-20 16:36:42
news-image

சபாநாயகரை சந்தித்தார் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்

2025-06-20 17:09:00