(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)
வடக்கில் இராணுவ முகாம்களை நீக்கக் கோரி அரசாங்கமோ பாதுகாப்பு அமைச்சோ எந்த கட்டளையும் பிறப்பிக்கவில்லை. வடக்கின் முகாம்கள் ஒருபோதும் நீக்கப்படப் போவதுமில்லை. அதேபோல் தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று தினேஷ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இராணுவ படையணி குறிப்புகள் உள்ளிட்ட நிருவாக தீர்மானங்களை இராணுவமே முன்னெடுக்கின்றது, இதில் எந்தவித அரசியல் தலையீடுகள் இல்லை. இதனை தெளிவு படுத்தியே இராணுவத் தளபதி பாதுகாப்பு அமைச்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் மூலமாக தேசிய பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. தேசிய பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என இராணுவத் தளபது தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னர் சில படையணிகள் தனியாக இயங்குவது அவசியம் இல்லை என சுட்டிக்கட்டியுள்ள இராணுவம் அவ்வாறான படையணிகள் , குறைந்த படைகளை கொண்ட அணிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு அணியாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றது. அதை விடுத்து படையணியை இராணுவத்தில் இருந்து நீக்குவது நிக்கம் அல்ல. அவ்வாறு நீக்கப்படப்போவதும் இல்லை. இராணுவத்தின் எண்ணிக்கை அவ்வாறே இருக்கும்.
அதேபோல் வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் நீக்கப்படுவதாக இராணுவம் கூறவில்லை. அரசாங்கமாக நாமும் அவ்வாறன எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. எமக்கு எந்தத் தேவையும் இல்லாது நாம் இராணுவத்தை கட்டுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM