கசினோ மூலம் பெறப்பட்ட பெருந்தொகை பணத்துடன் 4 வெளிநாட்டவர்கள் கைது

Published By: Digital Desk 4

17 Jul, 2018 | 11:15 AM
image

இலங்கையில் கசினோ மூலம் பெற்ற பெருந்தொகை வெளிநாட்டுப் பணத்துடன் விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர்கள்  நால்வரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நால்வரில் இருவர் சீனப் பிரஜைகள் எனவும் ஏனைய இருவரும் நேபாள நட்டவர்கள் எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீன நாட்டவர் 30 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும் நேபாள நாட்டவர்கள் இருவரும் 20 மற்றும் 25 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு குறித்த பணத்தை பயணப்பொதி மற்றும் காற்சட்டை பைக்குள் மறைத்து வைத்தக்கொண்டு செல்லும் போதே சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டது 169,900 அமெரிக்க டொலர் எனவும் அவற்றின் பெறுமதி 2,75,24,000 ரூபாவெனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கு வந்து கசினோ விளையாட்டின் மூலம் பெறப்பட்ட பணம் என அவர்களிடம் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நால்வர் மீது விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30