சிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதையின் அறிமுக நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
சாமிநாதன் விமல் மொழிபெயர்த்த கௌஷல்ய குமாரசிங்ஹவின் “இவ்விரகசிய சாரளத்தால் உற்றுநோக்கின்” (நாவல்) மற்றும் பிரபாத் ஜயசிங்ஹவின் “மகர தோரணம்” (சிறுகதைகள்) , சிவலிங்கம் அனுஷா மொழிபெயர்த்த நிஷ்ஷங்க விஜேமான்னவின் “தாரா ஷியாமலீ குமாரசுவாமி” (நாவல்) ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வே நடைபெறவுள்ளது.
யாழ்.பல்கலைகழக கலைப்பீட புதிய கட்டடத்தின் 408 ஆம் இலக்க மண்டபத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலாநிதி அதுலசிறி சமரகோன் (விரிவுரையாளர், திறந்த பல்கலைக்கழகம்), கலாநிதி சுமதி சிவமோகன் (விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்), திரு மகேந்திரன் திருவரங்கன் (விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர்.
"இவ்விரகசிய சாரளத்தால் உற்றுநோக்கின்” (நாவல்) 500 ரூபாய் - அன்றைய தினம் 400 ரூபாவிற்கும்“தாரா" 450 ரூபாய் - அன்றைய தினம் 350 ரூபாவிற்கும் “மகர தோரணம்” (சிறுகதைகள்) 400 - அன்றைய தினம் 300 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM