(ரொபட் அன்டனி)
எதிர்க்கட்சி தலைவர் பதவி தமது அணிக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கும் நோக்கில் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான குழுவினர் இவ்வாரம் சபாநாயகருடன் பேச்சு நடத்தவுள்ளனர்.
இதன்போது தமது அணிக்கு 70 உறுப்பினர்கள் இருப்பதாகவும் எனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கு வழங்கப்படவேண்டும் என்றும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் கூட்டு எதிரணியின் பாராளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிடுகையில்,
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கு வழங்கப்படவேண்டும். கூட்டு எதிரணி தனி அணியாக செயற்பட்டுவருகின்றது.
தற்போது கூட்டு எதிரணியில் 70 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் 16 பேரைக் கொண்டுள்ள தமிழ்க் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனை ஏற்க முடியாது. 70 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கூட்டு எதிரணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவேண்டியது அவசியமாகும்.
இந்நிலையில் இது தொடர்பில் நாங்கள் பல தடவைகள் சபாநாயகரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளோம். ஆனால் இதுவரை எமக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது கூட்டு எதிரணியில் உள்ள எம்.பி. க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே இவ்வாரம் சபாநாயகரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எமக்கு வழங்குமாறு நாம் கோரிக்கை விடுக்கவுள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM