ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார்

Published By: Vishnu

15 Jul, 2018 | 08:36 AM
image

(நேற்றைய தொடர்ச்சி)

கேள்வி : உங்கள் ஆட்­சிக்­கா­லப்­ப­கு­தியில் காணா­மல்­போனோர் தொடர்பில் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் திருப்தி தரு­கின்­ற­னவா?

பதில் : யுத்தம் முடிந்­ததும்  நாங்கள் ஒரு புள்­ளி­வி­ப­ரக்­க­ணக்­கெ­டுப்பை  செய்தோம். அந்­தக் ­க­ணக்­கெ­டுப்பை புள்­ளி­வி­ப­ரத்­தி­ணைக்­க­ளமே செய்­தது.அந்தக் கணக்­கெ­டுப்பில் சர்­வ­தேச சமூ­கமோ, புலம்­பெயர் மக்­களோ  மகிழ்ச்சி  அடைய முடி­யாத  பெறு­பேறே வந்­தது.அந்த அறிக்­கை­யின்­படி   இக்­கா­லப்­ப­கு­தியில்    புலிகள் உறுப்­பி­னர்கள் உட்­பட   7ஆயிரம் பேர­ள­வி­லேயே காணா­மல்­போ­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.  அதே­போன்று  யுனேஸ்கோ அமைப்பு எமது அர­சாங்­கத்­திற்கு தெரி­யாமல் வட­மா­கா­ணத்­துடன் இணைந்து  ஒரு கணக்­கெ­டுப்பை நடத்­தி­யது.   அதில்  மூவா­யிரம் பேர­ள­வி­லேயே எண்­ணிக்கை காணப்­பட்­டது.  இரா­ணுவம்   பலரை  முகாம்­களில்  மறைத்து வைத்­தி­ருப்­ப­தாக சிலர் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தனர்.  அது முழு­மை­யான  பொய்­யான தக­வ­லாகும்.  

எம்­மிடம்   இருந்­த­வர்கள் தொடர்பில்  எங்­க­ளிடம் தர­வுகள் இருந்­தன. ஒரு­த­ரப்­பி­னரை புனர்­வாழ்வு அளித்து சமூ­க­ம­யப்­ப­டுத்­தினோம்.மற்­று­மொ­ரு­ த­ரப்­பினர்   நீண்­ட­கா­ல­மாக   தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.   யுத்தம் முடிந்­த­போது இவ்­வாறு  4ஆயிரம் பேர் வரையில் இருந்­தனர். எனினும் 2014ஆம் ஆண்டு  ஆகும்­போது 290 பேர் இருந்­தனர்.    அவர்­க­ளையும்    உற­வி­னர்­களும் சட்­டத்­த­ர­ணி­களும் சந்­திப்­ப­தற்கு ஏற்­பாடு செய்தோம்.   எம்­மிடம்  இன்னும் பலர் இருப்­ப­தாக அதி­க­மானோர் நம்­பினர். ஆனால் அப்­படி யாரும் எம்­மிடம் இல்லை. 

கேள்வி : யுத்­தத்தின் இறு­திக்­கட்­டத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித  உரிமை மீறல்கள் குறித்து ?

பதில் : அவை வெறும் குற்­றச்­சாட்­டுகள்  மட்­டு­மே­யாகும். இது தொடர்பில் ஆராய  முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜகத் ஜய­சூ­ரிய தலை­மையில்   நாம் இரா­ணு­வக்­கு­ழு­வொன்றை நிய­மித்தோம்.  இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களில் உண்­மை­யுள்­ளதா என  விசா­ரிக்­கு­மாறு கோரினோம்.யாரா­வது   அவ்­வாறு    சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் இருக்­கின்­றார்­களா என   கேட்டோம்.  மேலும்  இது தொடர்பில் விசா­ரணை நடத்­திய ஐ.நா. ஏன்    யுனெஸ்­கோவின் அறிக்­கையை  பரி­சீ­லனை செய்­ய­வில்லை?  யுத்­தத்தின் இறு­திக்­கட்­டத்தில்  தப்­பித்து வந்­த­வர்­களை  இரா­ணுவம் எவ்­வாறு பார்த்­துக்­கொண்­டது என்­பதை இந்த நாட்டு மக்கள் பார்த்­தனர். மக்­களை  எவ்­வாறு  பார்த்­துக்­கொண்­டனர் என்­பது மக்­க­ளுக்குத் தெரியும். அது  வெளிப்­ப­டை­யா­கவே முன்­னெ­டுக்­கப்­பட்­டது. புல்­மோட்­டைக்கு கடற்­ப­டை­யினால் மக்கள் மீட்­கப்­பட்டு   கொண்­டு­வந்து இறக்­கப்­பட்­ட­போது  அவர்­களை  முதலில்  இரா­ணு­வத்­தி­னரால் அமைக்­கப்­பட்ட   மருத்­து­வக்­கு­ழாமே பொறுப்­பேற்­றது.   

யுத்தம் என்­பது இனி­மை­யா­னது அல்ல.   உலகில் எங்­குமே யுத்தம் என்­பது  இனி­மை­யற்­ற­துதான்.   பயங்­க­ர­வா­தி­க­ளுடன் யுத்தம் செய்­வது  அதனை விடக்­க­டி­ன­மா­னது.  எதிரி எம்மைத் தாக்­கும்­போதும்  நாங்கள் அவர்களை தாக்­கும்­போதும்    வரை­ய­றை­யற்ற  சேதங்கள் ஏற்­ப­டலாம்.  ஆனால்  அது எந்த யுத்­தத்­திலும் இருக்கும். எமக்கு யுத்­தத்தை முடிக்கும்  தேவை  இருந்­தது.பொது­மக்­களை  யுத்­தத்­தி­லி­ருந்து மீட்­டெ­டுக்க பாரிய அர்ப்­ப­ணிப்பை செய்தோம்.  புலிகள் மக்­களை  மனி­தக்­கே­ட­ய­மாக பயன்­ப­டுத்­தினர்.

கிளி­நொச்சி  வீழ்ந்த பின்னர்  பொது­மக்கள் பாது­காப்பு  வல­யத்­திற்கு வந்­த­போது  துப்­பாக்கிச் சூடு மேற்­கொண்­டனர்.  தற்­கொலைத் தாக்­கு­தலும் நடத்­தப்­பட்­டது. அவ்­வாறு  மக்கள்  தடுக்­கப்­பட்­டனர்.  இந்­நி­லையில் இரா­ணுவம்   எவ்­வா­றான  மனி­தா­பி­மான சேவையை மக்­க­ளுக்கு வழங்­கி­யது என்­பதை புரிந்­து­கொள்­ள ­வேண்டும்.    

பொது­மக்­களை  தாக்­கு­வது தொடர்­பான  எவ்­வி­த­மான பொது­நோக்­கமும் இரா­ணு­வத்­திடம் இருக்­க­வில்லை.   அது  அக்­கா­லத்தில் அங்­கி­ருந்த சர்­வ­தேச  அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்குத் தெரியும்.ஆனால் இரா­ணுவம் இவ்­வாறு  பொது­நோக்­கத்­துடன் செயற்­பட்­ட­தாக காட்­டு­வ­தற்கு ஐ.நா. அதி­கா­ரி­களும் புலம்­பெயர் மக்­களும் முயற்­சிக்­கின்­றனர்.   யுத்­தத்தின் போது ஏதா­வது நடந்­தி­ருக்­கலாம். ஆனால் பொது­வான நோக்கம் ஒன்று இருக்­க­வில்லை. நாம் உணவு அனுப்­பினோம், மருந்து அனுப்­பினோம், பாது­காப்பு வல­யங்­களை உரு­வாக்­கினோம்.  கன­ரக ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்­தாமல் இருந்தோம்.   உலக உண­வுத்­திட்­டத்தின் பிர­தி­நி­திகள் அங்­கி­ருந்­தனர், தமிழ் அர­சாங்க அதி­கா­ரிகள் அங்­கி­ருந்­தனர். அவர்­கள்தான்   இந்­த­ளவு எண்­ணிக்­கை­ பொ­து­மக்கள் இருப்­ப­தாக எமக்கு தகவல் தந்­தனர். அதற்கேற்­ற­வாறு உணவும் மருந்தும் அனுப்­பு­மாறு எமக்குக் கூறினர்.இலட்­சக்­க­ணக்கில் இறந்­த­தா­கவும்   40 ஆயிரம் பேர் இறந்­த­தா­கவும் கூறு­வது மிகவும் பொய்­யா­ன­த­க­வல்கள். 

கேள்வி : யுத்­தத்தின் இறு­திக்­கட்­டத்தில்   வெள்­ளைக்­கொ­டி­யுடன் சர­ண­டை­ய­வந்த புலித்­த­லை­வர்­களை   சுட்­டுக்­கொன்­ற­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ?

பதில் : அது முற்­று­மு­ழு­தாக ஒரு பொய்­யான குற்­றச்­சாட்டு.  யுத்தம்  முடி­வ­டைய  முன்­பாக அப்­போ­தைய  இலங்­கைக்­கான நோர்வே தூதுவர் என்னைத் தொடர்­பு­கொண்டு  50 பேர்­கொண்ட குழு­வினர்  இருப்­ப­தாக   கூறினார்.  பின்னர்  அதனை  உறு­திப்­ப­டுத்­து­வ­தாக  அவர் என்­னிடம் கூறினார்.  அதன் பின்னர்  அவர் என்னைத் தொடர்­பு­கொண்டு தனக்கு அவர்­க­ளுடன்  தொடர்பை ஏற்­ப­டுத்த முடி­யாமல் போன­தாக தெரி­வித்தார். தற்­போது   அவர் கூட  இந்த விட­யங்­களை  வெளியில் கூறாமல் இருக்­கின்றார்.  

கேள்வி : யுத்தம் முடி­வ­டைய  எத்­தனை தினங்­க­ளுக்கு முன்­பாக நோர்வே தூதுவர் உங்­களை தொடர்­பு­கொண்டார். ?

பதில் : ஒரு ­தி­னத்­துக்கு முன்­பா­கவே என்னைத் தொடர்­பு­கொண்டார்.  இங்கு ஒரு விட­யத்தை  அனை­வரும் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.   யுத்­த­களம் தொடர்­பான  எந்­த­வி­த­மான   கள அறிவும் அற்­ற­வர்­களே  இந்த குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­றனர்.  நீங்கள் ஒரு விட­யத்தை சிந்­தித்­துப்­பா­ருங்கள்.  களப்­பி­லி­ருந்து வரு­கின்ற  மக்கள் மீதும்  துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டதை நாம் கண்டோம்.   

அதா­வது  யுத்­த­கா­லத்தில் இந்­தப்­பக்கம் இருந்து யுத்தம் செய்­து­கொண்டு இருக்கும் ஒரு இரா­ணுவ வீரரால்  புலி­களின் நடேசன் சர­ண­டைய வரு­கின்றார் என்­பதை அறிந்­து­கொள்ள முடி­யுமா? அல்­லது புரிந்­து­கொள்ள முடி­யுமா?   வெள்­ளைக்­கொடி ஏந்­தி­வந்­தாலும் அது தெரிந்­தி­ருக்­குமா?  அதுவும் இருளில் அங்­கி­ருந்து வரு­ப­வரை  எவ்­வாறு அடை­யா­ளம்­காண்­பது?  எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும்   அவர்கள் இவ்­வாறு வந்­த­தாக எந்­த­வி­த­மான உறு­திப்­ப­டுத்தும் தக­வல்­களும் இல்லை.  வெள்­ளைக்­கொ­டி­யுடன் வரு­ப­வர்­களை  இரா­ணுவ வீரர்­களால் அடை­யாளம் காண முடி­யுமா?  சர­ண­டைய வந்­த­வர்கள் கொல்­லப்­பட்­டார்கள் என்­ப­தற்கு எவ்­வி­த­மான ஆதா­ரங்­களும் இல்லை. 

கேள்வி : சரி.அவர்­க­ளுக்கு  உயி­ரைப்­பா­து­காத்­துக்­கொள்ளும் எண்ணம் இருந்­தி­ருந்தால் அவர்கள் என்ன செய்­தி­ருக்­க­வேண்டும்?

பதில் : அவர்­க­ளுக்கு அதற்கு  அதி­க­ள­வான சந்­தர்ப்­பங்கள் இருந்­தன.  ஆனால் யுத்­தத்­தின்­போது புலித்­த­லை­வர்­களை இரா­ணுவ வீரர்கள்  உட­ன­டி­யாக  அடை­யா­ளம் ­காண முடி­யுமா?   வேண்­டு­மெனில் பிர­பா­க­ரனை மட்டும் இரா­ணுவ வீரர்­க­ளினால் அடை­யாளம் காண முடியும்.  ஏனை­ய­வர்கள் தொடர்பில்  புகைப்­ப­டம்­ கூட இருக்­க­வில்லை.பொட்டு அம்­மானை நாம் கண்­டி­ருக்­க­வில்லை. பொட்­டு­அம்மான்  இன்று  இந்த கொழும்பு நகரில் நடந்து சென்றால் கூட  எம்மால் அடை­யாளம் காண முடி­யாது.    யுத்­த­க­ளத்தில் இருப்­பது சாதா­ரண  இரா­ணுவ வீரர்கள்.  அந்த சாதா­ரண  இரா­ணுவ வீரர்­க­ளுக்கு  புலித்­த­லை­வர்­களை அடை­யா­ளம்­ காண முடி­யுமா?  பெயர்கள் கேள்­வி­ப்பட்­டி­ருந்­தாலும்  அவர்­களின் உருவம் தெரி­யாது.  

கேள்வி : நோர்வே தூதுவர்  உங்­க­ளிடம் சரி­யாக என்ன கூறினார்?

பதில் : 50 பேர் கொண்ட குழு­வினர் இருப்­ப­தாக கூறினார்.அதா­வது விருப்­பத்­துடன் இருப்­ப­தாக கூறினார்.  அது தொடர்பில்  பின்னர் தான்  தகவல் தரு­வ­தாக கூறினார். ஆனால் அதன்­பின்னர்  அவரால் குறித்த 50 பேரை  தொடர்­பு­கொள்ள முடி­ய­வில்லை என்று கூறினார்.  

எனவே இந்­தக்­குற்­றச்­சாட்டை நான் முற்­று­மு­ழு­தாக நிரா­க­ரிக்­கின்றேன். அவர்கள் உயிரைப் பாது­காத்­துக்­கொள்ள எண்­ணி­யி­ருந்தால் அதற்­கான நிறைய சந்­தர்ப்­பங்கள் இருந்­தன.  அவர்கள் பொது­மக்­க­ளுடன் வந்­தி­ருக்­கலாம்.  நீங்கள் ஒரு விட­யத்தை புரிந்­து­கொள்­ளுங்கள். புலித்­த­லை­வர்கள் பலர் மக்­க­ளுடன் வந்து இரா­ணு­வத்­திடம் சர­ண­டை­யாமல்   புனர்­வாழ்வும் பெறாமல்  இந்­தி­யா­வுக்கு சென்று   அங்­கி­ருந்து மேற்­கு­ல­க ­நா­டு­க­ளுக்கு சென்­றுள்­ளனர். பிரான்ஸில் கூட பலர் இருக்­கின்­றனர்.  

கேள்வி : அதில்   புலித்­த­லை­வர்கள் உள்­ள­னரா?

பதில் : ஆம், புலித்­த­லை­வர்கள்  இவ்­வாறு சென்று  வெளி­நா­டு­களில் இருக்­கின்­றனர்.   புலி­க­ளிடம்  விமா­னப்­ப­டைப்­பி­ரிவு இருந்­தது.   விமா­னி­களும்  அவர்­க­ளிடம் இருந்­தனர்.   எமது இரா­ணுவம்  எத்­தனை விமா­னி­களை  பிடித்­தது?ஒருவர் கூட எம்­மிடம் சிக்­க­வில்லை.  

கேள்வி : என்ன நடந்­தது அவர்­க­ளுக்கு?

பதில் : அதைத்தான் நானும் கேட்­கின்றேன் அவர்கள் எங்கே?  நாம் அடை­யாளம் கூட காண­வில்லை. அந்த விமா­னிகள்  பிர­பா­க­ர­னுடன்   புகைப்­படம் எடுத்­தி­ருந்­தனர். அது பிர­ப­ல­மான புகைப்­ப­ட­மாகும்.   அவர்கள் இன்று வெளி­நா­டு­களில்  இருப்­பார்கள்.  எத்­தனை பேர் அவ்­வாறு   தப்­பித்துச் சென்­றுள்­ளனர் தெரி­யுமா?  காரணம்  இரா­ணு­வத்­தி­னரால் அவர்­களை அடை­யாளம் காண முடி­யாது.   பிர­பா­க­ரனின் தந்தை மற்றும் தாயை பாது­காப்­பாக மீட்­டெ­டுத்தோம்.  அத்­துடன் சூசையின்  மனை­வியை நாங்கள் மீட்­டெ­டுத்தோம். அவர் தற்­போது   வெளி­நாட்டில் இருக்­கின்றார்.  கடலில் வைத்தே அவரை மீட்­டெ­டுத்தோம்.  அது­பற்றி யாரும் பேச­வில்லை.காணா­த­தைப்­பற்றி பேசு­கி­றார்கள். கண்­ட­தைப்­பற்றி பேசு­வ­தில்லை.சூசையின் மனை­வியை  நடுக்­க­டலில் வைத்து பிடித்­ததும் அவர் தான் யார் என்­பதை  கூறினார். அவர்­களை அழைத்து வந்து நாம் பாது­காத்தோம். 

கேள்வி : பிர­பா­க­ரனின்   மகன் பாலச்­சந்­திரன் விவ­காரம்?

பதில் : அது ஒரு பொய்­யான  குற்­றச்­சாட்டு.   பாலச்­சந்­தி­ரனைப் பிடித்து வைத்­தி­ருப்­ப­தாக யாரும் எமக்கு கூற­வில்லை. அவர்  இறந்­து­விட்டார் என்ற செய்தி மட்­டுமே  எமக்குத் தெரியும். 

கேள்வி : ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிடும் எண்ணம்  உங்­க­ளுக்கு இருக்­கி­றதா?

பதில் : மஹிந்த ராஜ­பக் ஷ­வு­ட­னேயே  மக்கள் சக்தி இருக்­கி­றது.  நான் அர­சியல் செய்­த­தில்லை.  நான் பாது­காப்புச் செய­லா­ள­ராக எனது சேவையை செய்தேன். பாது­காப்பு செய­லா­ள­ராவே இந்த நாடு என்னைத் தெரிந்து கொண்­டது.  யுத்­தத்தை நிறைவு செய்தல் மற்றும்   நகர அபி­வி­ருத்தி  என்­ப­வற்றின் ஊடா­கவே  மக்கள் என்னைத் தெரிந்து கொண்­டனர்.  அதன்­படி  மக்கள் மத்­தியில்   இது­தொ­டர்பில் ஒரு கருத்து உரு­வா­கி­யி­ருக்­கி­றது.  

என்னை சந்­திக்கும் அனை­வரும்  நான் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டு­மென கூறு­கின்­றனர்.என்னால்   வேலை­செய்ய முடியும் என்று மக்கள் நம்­பு­கின்­றனர்.   ஆனால்  நான் அர­சியல் செய்­தது இல்லை என்­பது உண்­மை­யாகும்.  எனது  குடும்­பத்தில் அனை­வரும் அர­சி­யல்­வா­திகள்.   நான் அர­சியல் செய்­ய­வில்லை.  நான் இரா­ணு­வத்­தி­லி­ருந்து ஓய்வு பெற்று வெளி­நாட்டில் இருந்தேன். 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜ­பக் ஷ  ஜனா­தி­ப­தி­யா­னதும்  பாது­காப்பு செய­லா­ள­ராக பதவி வகித்தேன்.   

தற்­போது  மஹிந்த ராஜ­பக் ஷவுக்கே மக்கள்  சக்தி இருக்­கி­றது.   எனவே மஹிந்த ராஜ­பக் ஷவே   வேட்­பா­ளரை தெரிவுசெய்து  அறி­விப்பார்.   இன்­னு­மொரு வேட்­பா­ள­ராக   பஷில் ராஜ­பக் ஷவின் பெயரும் காணப்­ப­டு­கின்­றது.ஆனால் பஷில் ராஜ­பக் ஷ தான் போட்­டி­யிட மாட்டேன் எனக்  கூறி­யி­ருக்­கின்றார்.  மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கும் பஷில் அதனைக் கூறி­யி­ருப்பார். எப்­ப­டி­யி­ருப்­பினும் யார் வேட்­பாளர் என்­பதை  மஹிந்த ராஜ­பக் ஷவே தெரிவு செய்வார்.  யார் வேட்­பா­ள­ராக வந்­தாலும்  இந்த நாட்­டுக்கு நான்  சேவை­யாற்ற முடியும். மஹிந்த ராஜ­பக் ஷவின் தலை­மையில் உரு­வா­கப்­போகும் அர­சாங்­கத்தில் எனது பொறுப்பை நான் வகிப்பேன். அதில் பஷில் ராஜ­பக் ஷவிற்கும் பாரிய பொறுப்பு இருக்கும்.   மஹிந்­தவின் தலை­மைத்­து­வ­மின்றி  மக்கள் யாரையும் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள்.   தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்­பின்­படி பிர­த­ம­ருக்கு பாரிய அதி­கா­ரங்கள் உள்­ளன.  பாரா­ளு­மன்­றத்­திற்கு அதி­கா­ரங்கள் உள்­ளன.   எனவே அந்த அதி­காரம்  மஹிந்­த ­ராஜ­பக்ஷவுக்கே செல்லும்.கடந்த காலத்தில் நாம் சகோ­தரர்கள் என்ற வகையில் பொறுப்­புடன் செயற்­பட்டோம்.  

கேள்வி : மஹிந்த ராஜ­பக் ஷ என்ன முடி­வெ­டுத்­தாலும்  ஜனா­தி­பதி வேட்­பாளர் ஆவது தொடர்பில்  உங்­க­ளுக்கு எண்ணம் இருக்­கின்­றதா?

பதில் : நான்  அதற்கு தயார்.  என்னை மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக தெரிவு செய்தால்  போட்­டி­யிட்டு நாட்டின் தலை­மைத்­து­வத்தை  ஏற்க நான் தயா­ராக இருக்­கின்றேன். காரணம்  என்னை வரு­மாறு   கோரிக்கை எழுந்­தி­ருக்­கின்­றது.   மஹிந்த கோரிக்கை விடுத்தால் நான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக  தயா­ரா­கவே இருக்­கின்றேன்.  

கேள்வி : நீங்கள் அமெ­ரிக்க  குடி­யு­ரிமை உள்­ளவர்.,  எனவே  அது  உங்­க­ளது வேட்­பாளர்  ஆகும் எண்­ணத்­திற்கு தடை­யாக அமை­யுமா?

பதில் : இங்­குள்ள அர­சி­யல்­வா­திகள்   அவ்­வாறு கூறி­னாலும் அமெ­ரிக்கா   குறு­கிய அர­சியல் நோக்கம் கொண்ட  செயற்­பாட்டில் இறங்­காது என்று நான் நம்­பு­கின்றேன். அது தவ­றா­ன­து­மாகும்.   அமெ­ரிக்கா எப்­போ­துமே தனிப்­பட்ட சுதந்­திரம் குறித்து பேசு­கின்­றது. இது எனது தனிப்­பட்ட சுதந்­திரம்.அமெ­ரிக்கா அவ்­வாறு நடந்­து­கொள்ளும் என   எதிர்­பார்க்க முடி­யாது. அதற்கு எந்­த­வி­த­மான ஒரு கார­ணமும் கிடை­யாது.   

தற்­போது அர­சாங்­கத்தில் இருக்கும் அனை­வரும் என்னைத் தடுப்­ப­தி­லேயே குறி­யாக இருக்­கின்­றனர்.  இதுவா ஜன­நா­யகம்?   எவ­ரா­வது ஒருவர் தேர்­தலில் நிற்­ப­தற்கு ஏன் பயப்­ப­ட­வேண்டும்? அதனை ஏன்    தடுக்க முயற்­சிக்க வேண்டும்?  அவர்கள் திற­மை­யா­ன­வர்கள், மக்கள் செல்­வாக்கு உடை­ய­வர்கள் என்றால் ஏன் என்னைத் தடுக்க முற்­ப­ட­வேண்டும்?   சரி­யான ஜன­நா­யகம் இருக்­கு­மென்றால்   நான் போட்­டி­யி­டு­வதை வர­வேற்­க­வேண்டும்.  

கேள்வி : நீங்கள் சீனா­வுக்குச் சென்று ஒரு­ மா­த­கா­ல­மாக அர­சியல் பயிற்சி பெற்­ற­தாக கூறப்­ப­டு­கின்­றதே?

பதில் : இல்லை, இல்லை. அது தவ­றான தகவல்.  2015ஆம் ஆண்டு தேர்தல் முடி­வ­டைந்­ததும்  அப்போது இருந்த சீனத்தூதுவர் என்னை அழைத்து   சீனாவிலுள்ள பல்கலைக்கழகத்தில்  எங்களது அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.   நான் சரியென்று கூறினேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை.   அதேபோன்று  தேர்தல்  முடிந்த மறுதினமே  சிங்கப்பூரின் அப்போதைய  வெளிவிவகார அமைச்சர் சண்முகம்  என்னை அழைத்து  அங்குள்ள  பல்கலைக்கழகத்தில் உரையாற்றுமாறு கூறினார்.   நான் அதை ஏற்று சிங்கப்பூர் சென்றேன். அதுபோன்று சீன விஜயமும் அமைந்தது. 

கேள்வி : கோத்தபாய ராஜபக் ஷவினால் தமிழ், முஸ்லிம் வாக்குகளைப் பெற முடியாது என்ற கருத்து உள்ளது. இதை எப்படி நீங்கள் பார்க்கின்றீர்கள்?

பதில் : 2015ஆம் ஆண்டு  சிறுபான்மை மக்களின் வாக்குகள் மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு அதிகம் கிடைக்கவில்லை.  பொதுபலசேனாவுக்கு நாங்கள் ஆதரவு என்ற பொய்ப்பிரசாரம் நிலவியதால் எமக்கு   அந்த நிலைமை ஏற்பட்டது.  ஆனால் இன்று முஸ்லிம் மக்கள் உண்மையை  புரிந்துகொண்டுள்ளனர். எனவே முஸ்லிம்  மக்களின் வாக்குகளை என்னால் பெற முடியும்.  தமிழ் மக்களின் வாக்குகள்  மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு  கிடைக்கும்.   மஹிந்த ராஜ­பக் ஷவை நம்பி தமிழ் மக்கள் வாக்களிப்பர்.  அப்படியாயின் எனக்கு  தமிழ் மக்களின் வாக்குகளையும் பெற முடியும். 

காரணம் தமிழ் மக்கள் மஹிந்த மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.  ஆனால் தமிழ் மக்கள்   அவர்களுக்கு  நாங்கள் எவ்வளவு சேவையாற்றினோம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.  எம்மைப்போன்று எவரும்  தமிழ் பேசும்  மக்களுக்கு சேவையாற்றவில்லை.  தமிழ் தலைவர்களுக்கு நாம் தேவையற்றவர்களாக இருக்கலாம்.   ஆனால் தமிழ் மக்களுக்கு நாம்  தேவைப்படுகின்றோம்.  நாம் தான் சமாதானத்தைக்  கொண்டுவந்தோம். நாம்தான் அபிவிருத்தி செய்தோம். கொழும்பில்  குறைந்த வருமானம் பெறும்  மக்களுக்கு நாம் வீடுகள் வழங்கினோம். 

கேள்வி : நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தேசிய பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில்  என்ன அணுகுமுறையைப் பின்பற்றுவீர்கள்.?

பதில் : இதனைத்தருவேன் என்று என்னால் இப்போது கூற முடியாது. ஆனால்   தமிழ், முஸ்லிம் , சிங்களம் என யாராக இருந்தாலும் அனைவரும்  கௌரவமான பிரஜையாக இலங்கையர்  என்ற ரீதியில் வாழும்  சூழலை  நான் உருவாக்குவேன்.  அனைத்து மக்களுக்கும் வீடுகளை  பெற்றுக்கொள்ளும் உரிமை, தொழில்பெறும் உரிமை, வாழும் உரிமை   கல்வி கற்கும் உரிமை  என்பவற்றை சமமான முறையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.  தமக்கு  விருப்பமான மதத்தை பின்பற்றவும்  விருப்பமான  வியாபாரத்தை செய்யவும்  சந்தர்ப்பத்தை  உறுதிப்படுத்துவேன்.  குறிப்பாக பல்கலைக்கழகத்துக்கு 2 இலட்சம் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டால் அவர்கள் அனைவருக்கும் உயர்கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் நிலைமையை உருவாக்குவேன்.  

கேள்வி : தமிழ் பேசும் மக்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில் : சிறுபான்மை மக்கள் ராஜ­பக் ஷமாரைப்  பார்த்து பயப்படவேண்டாம்.  எம்மைப்பற்றி  பொய்யான  பிரசாரம் செய்யப்படுகின்றது.   நாங்கள் ஒரு இனத்தைப் பார்த்து வேலைசெய்பவர்கள்  அல்லர்.   ராஜ­பக் ஷமாரின் நெருங்கிய உறவினர்களாக தமிழர்களும் உள்ளனர்.  எனவே எம்மை நம்புங்கள். சிறந்த பௌத்தர்கள்  அனைத்து இனமக்களையும் நேசிப்பார்கள்.  பௌத்தர்கள்  தமிழர்களுக்கும்  முஸ்லிம்களுக்கும் எதிரானவர்கள் என்று தவறான பிரசாரம்  செய்யப்படுகின்றது.   நாம் அனைவருக்கும் சமமாகவே சேவையாற்றுவோம்.

(நேர்கண்டவர் : ரொபட் அன்­டனி)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04