தேசிய ரீதியாக வருடாந்தம் இடம்பெறும் தேசிய மட்ட மாற்றாற்றல் உடையோருக்கான விளையாட்டு விழவிற்காக பங்கு பெருநர்களை தெரிவு செய்யும் நிகழ்வின் முதற் கட்டமாக மாவட்ட ரீதியில் உள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளை தெரிவு செய்யும் மாற்றாற்றல் உடையோருக்கான விளையாட்டு விழா இன்று மன்னாரில் இடம் பெற்றுள்ளது.
இன்று காலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
சமூகசேவை திணைக்களமும் சமூக நலன் பிரிவு கைத்தொழில் அமைச்சின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மன்னார் மாவட்த்தில் உள்ள 5 பிரதேச செயலகங்களிலும் உள்ள மாற்றாற்றல் உள்ளவர்களை ஒருங்கிணைத்து குறித்த விளையாட்டு விழா இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலகங்களையும் சேர்ந்த 150 ற்கும் மேற்பட்ட மாற்றாற்றல் உடைய ஆண், பெண் இரு பாலாரும் போட்டியாளர்களாக குறித்த விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வெற்றி கிண்ணங்களையும், சான்றிதழ்களையும் பெற்று கொண்டனர்.
குறித்த மாவட்ட விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற அணைத்து வீர வீராங்கனைகளும் வருகின்ற மாதங்களில் நடை பெறவிருக்கின்ற தேசிய மட்ட விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM