1775.93 ஏக்கர் காணிகள் ராணுவத்தின் வசம்

Published By: Digital Desk 4

13 Jul, 2018 | 09:31 PM
image

வவுனியாவில் போர் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் தொடக்கம் நடப்பாண்டின் இன்று வரையான காலப்பகுதியில் 1775.93 ஏக்கர் காணிகள் ராணுவத்தின் வசம் இருப்பதாக வவுனியா மாவட்டசெயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

  

அந்தவகையில் வவுனியா  மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரங்களின் படி  போர் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான காலப்பகுதியில் அரசுக்கு சொந்தமான காணிகளாக 10788.3 ஏக்கரும் தனியாருக்கு சொந்தமாக 135 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 10923.67 ஏக்கர் காணிகள்  ராணுவத்தின் வசம் இருந்துள்ளது.

பின்னர் 2014ம் ஆண்டு டிசம்பர் 31 ம் திகதி வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் 1781.93 ஏக்கர் காணிகள் ராணுவத்தால் கையளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1713.8 ஏக்கர் அரசகாணியும் 61.7 தனியார் காணியாகவும் இருக்கிறது. 

2014 ம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் இன்று வரையான காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில் 7369.81 ஏக்கர் காணிகள் ராணுவத்தால் விடுவிக்கபட்டுள்ளதுடன் மீதமாக உள்ள   1775.93 ஏக்கர் காணிகள் ராணுவத்தின்வசம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

அவற்றில் அரசுக்கு சொந்தமாக 1713.8 ஏக்கரும் தனியாருக்கு சொந்தமாக 62.13 ஏக்கர் காணிகளும் அடங்குவதாக வவுனியா மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:30:27
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13