1983 ஆம் ஆண்டு முதல் கடந்த 2015 வரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 3270 பேர் காணாமல் போயுள்ளார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அரசாங்கம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் அ.த.க. பாடசாலையின் விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். பாடசாலை அதிபர் கே.சத்தியவரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயத்துறை அமைச்சர் கி. துரைராஜசிங்கம், பிரதிக்கல்விப் பணிப்பாளர் தி.ரவி, கோட்டக்கல்விப் பணிப்பாளர் நா.குணலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த கால அசாதாரண சூழ்நிலையின் போது எமது உறவுகளில் பலர் காணாமல் போயுள்ளார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்காமல் தினமும் வேதனையுடன் வாழ்கின்றனர். 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 1987 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சுமார் 1552 பேர் காணாமல் போயுள்ளார்கள். அவர்களை இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழுக்களுமே கடத்திச் சென்றுள்ளதாக அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர்.1987இல் இந்திய இராணுவத்தினரால் 165 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 1990 முதல் 2015 வரையிலான காலப்பகுதியில் 1560 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் கிழக்குப்பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்திருந்தவர்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போதும் அவர்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரை அறியாத நிலையில் அவர்களது உறவினர்கள் அலைந்து திரிகின்றார்கள். யுத்தத்தின் பின்பு 130 க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளார்கள். அவர்கள் பற்றி எவ்வித தகவல்களும் இல்லை
காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளின்போது யார் யார் பலவந்தமாக அழைத்துச் சென்றார்கள் என காணாமல் போனவர்களது உறவினர்கள் சாட்சியமளித்துள்ளார்கள். இதுவரை இவ்விடயங்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த விசாரணைகள் மீது எமது உறவுகள் நம்பிக்கையிழந்துள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM