""2500 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் இணைகிறது'' 

Published By: MD.Lucias

27 Feb, 2016 | 10:15 AM
image

 

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட் டுள்ளதான 2500 ரூபா சம்பள அதிகரிப்பை மார்ச் மாதத்தில் அடிப்படைச் சம்பளத்துடன் இணைப்பதற்கான ஏற்பாடுகள் நிறை வடைந்திருப்பதாகவும் அது தொடர்பிலான சுற்று நிருபம் வெளி யாகியிருப்பதாகவும் பொதுநிர்வாக மற்றும் அரச முகா­மைத்­துவ அமைச் சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார்.

அமைச்சில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­ளாளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

அரச சேவை­யினை பலப்­ப­டுத்தும் முகமாக நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்ச்சியான முயற்­சி­களை மேற்­கொண்டு வந்­துள்­ளது.. இத­ன­டிப்­ப­டை­யி­லேயே தேசிய அர­சாங்­கத்தின் நூறு நாள் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களில் உறு­தி­ய­ளித்­த­தன்­படி அரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான அடிப்­படை சம்­ப­ளத்­தில பத்­தா­யிரம் ரூபா­வினை மேல­திக கொடுப்­ப­ன­வாக வழங்­கி­யி­ருந்­தது.

இது­வ­ரை­கா­லமும் அரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான அடிப்­படை சம்­பளம் அதி­க­ரிக்­கப்­ப­டாது மேல­திக கொடுப்­ப­ன­வு­களே வழங்­கப்­பட்டு வந்­துள்­ளன. தேசிய அர­சாங்கம் பத­வி­யேற்ற பின்னர் மேல­திக கொடுப்­ப­ன­வாக 10000 ரூபா­வினை வழங்­கி­யி­ருந்­தது. ஆயினும் மேற்­கு­றித்த கொடுப்­ப­னவு அடிப்­படை சம்­ப­ளத்­துடன் இணைக்­கப்­ப­டா­ம­லி­ருந்­தது. இத­ன­டிப்­ப­டையில் 2016 ஆம் ஆண்­டுக்­கான தேசிய அர­சாங்­கத்தின் வரவு – செல­வுத்­திட்­டத்தில் குறித்த கொடுப்­ப­ன­வு­களை அடிப்­படை சம்­ப­ளத்­துடன் இணைக்க ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. மேலும் அதற்­கான அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைக்­கப்­பெற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இத­ன­டிப்­ப­டையில் அரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான அடிப்­படை சம்­ப­ளத்தில் 2500 ரூபா மேல­திக கொடுப்­ப­னவை இணைப்­ப­தற்­கான சுற்­று­நி­ருபம் வெளியி­டப்­பட்­டுள்­ளது.

மேலும் அரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான மேல­திக கொடுப்­ப­ன­வான 10,000 ரூபா ஐந்து கட்­டங்­க­ளாக அடிப்­படை சம்­ப­ளத்­துடன் இணைக்­கப்­ப­ட­வுள்­ளது. நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நட

வடிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நன்றியை தெரிவிக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14