(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றத்தில் ஏனைய உறுப்பினர்களுக்கு இருக்கின்ற கட்டுப்பாடுகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் உள்ளது. ஆகவே 'நியூயோர்க் டைம்ஸ்' விவகாரம் தொடர்பில் அவர் விளக்கமளிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ காரியவசம் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வந்தால் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி தொடர்பில் விளக்கமளிப்பேன் என மஹிந்த கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் இவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவருக்கென்று விசேட சலுகைகள் வழங்க முடியாது.
சீன துறைமுக கடன் தொடர்பில் நியூயோர்க் டைம்ஸ் செய்தியானது ஒரு தனிப்பட்ட விடயமாக மஹிந்த ராஜபக்ஷ கருத முடியாது இவ்விடயம் நாட்டின் அரச கடன்களுடன் தொடர்புபட்டதாக காணப்படுகின்றது. ஆகவே இது தொடர்பில் அவர் கட்டாயம் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM