மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் நீர் வழிந்தோடும் அரச காணியை அத்துமீறி பிடிப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததுடன் இது தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இன்று காலை கல்லடி பாலத்திற்கு அருகில் நீண்டகாலமாக அரச காணியாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காணியொன்றுக்குள் நுழைந்தவர் குறித்த காணிக்குள் வேலி அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த காணியை அடைத்து அதனை கொழும்பில் இருந்து வருகைதந்த வேறு இனங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையினை குறித்த நபர் மேற்கொண்டிருந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
அந்த பகுதியூடாகவே மழை காலங்களில் காத்தான்குடி தொடக்கம் பல பகுதிகளில் வெள்ளநீர் வழிந்து மட்டக்கள
ப்பு வாவிக்குள் செல்வதாகவும் குறித்த பகுதியை அபகரிக்கும் நிலையில் போலி ஆவணங்களை கொண்டுவந்து குறித்த பகுதியை ஆக்கிரமிக்க முற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டினர்.
குறித்த காணியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியென அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த பாதகையினை உடைத்துவிட்டு குறித்த காணியை வேலியிட சிலர் முயற்சித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்குவந்த மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதேச கிராம சேவையாளர் திருமதி நவஜீவிகா வேந்தன் ஆகியோர் குறித்த பகுதியில் நடைபெற்ற அத்துமீறல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது அங்கு வந்த காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அது தொடர்பில் ஒருவரை கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.
குறித்த காணி அரச காணியெனவும் அதற்கான அறிவித்தல் பலகை நீண்டகாலமாக வைக்கப்பட்டிருந்ததாகவும் பிரதேச கிராம சேவையாளர் திருமதி நவஜீவிகா வேந்தன் தெரிவித்தார்.
இந்த காணியின் ஊடாக பல இடங்களின் வெள்ள நீர் காலாகாலமாக வடிந்துசெல்வதாகவும் இதனை அடைத்தால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் எனவும் எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM