மலையகத்தில் திட்டமிட்டு மலையக மக்களின் சனத்தொகையை குறைப்பதற்காக கருத்தடைகள் முன்னெடுக்கப்ப டுவதாக நேற்று வியாழக்கிழமை சபையில் குற்றம்சாட்டிய கூட்டமைப்பு எம்.பி. சி.ஸ்ரீதரன், தேயிலைச் செடிகள் வளர வளர கவ்வாத்துச் செய்யப்படுவது போல் மலையகத்தின் கல்வி வெட்டப்படுகின்றது என்றும் கவலை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மலையக மக்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் வாழ்க்கை தர உயர்வு தொடர்பாக ஜே.வி.பி எம்.பி அநுரகுமார திஸாநாயக்கவினால் சபையில் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு விவா தத்தில் உரையாற்றும் போதே ஸ்ரீதரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,இரண்டு கோடி மக்கள் வாழும் இலங்கை நாட்டில் மலையக பெருந்தோட்ட மக்கள் 10 இலட்சத்திற்கும் மேல் வாழ்கின்றனர்.
இவர்கள் இலங்கையின் தேசிய இன மாவர். ஆனால் அவ்வினத்திலிருந்து 120 பேர்கள்தான் பல்கலைக்கழகம் போகின்றனர். இது அநீதியாகும். அவர்களது கல் வித் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அவர்களுக்கு கல்வித்துறையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
மலையக மக்களின் பிரச்சினைகள் தொட ர்பாக பேசப்படுகிறது. ஆனால் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படுவதில்லை.
மலையக பெருந்தோட்ட மக்கள் ஒரு தேசிய இனம் ஆனால் அவ்வினத்திற்கான சொந்த காணியில்லை. சொந்த வீடுகள் இல்லை. ஒரு தேசிய இனம் காணியில்லாது அநாதைகளாக்கப்பட்ட இனமாக வாழ்கின்றது. மலையகத்தில் தமிழ் மொழி மறுக்கப்படுகிறது. சிங்கள மொழி திணிக்கப்படுகின்றது. இன்று இம்மக்கள் குழுமத்தின் சனத் தொகையை குறைப்பதற்கு திட்டமிட்டு கட் டாய கருத்தடை மேற்கொள்ளப்படுகிறது என்றும் ஸ்ரீதரன் எம்.பி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM