(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியுமா? இது தொடர்பில் சபாநயாகர் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளமையின் காரணமாக உணர்ச்சிவசப்பட்டு விஜயகலா மகேஸ்வரன் மீண்டும் புலிகள் வேண்டும் என கூறியுள்ளார். இந்த கருத்தினூடாகதான் அவர் அரசியலமைப்பினை மீறியுள்ளமை தெட்டத் தெளிவாகியுள்ளது.
இவ்வாறான நிலையில் அவரால் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து இருக்க முடியுமா? தமிழ் மக்களின் ஏனைய பிரச்சினைகள், சாதாரண மக்களின் இன்னல்களை பற்றி பேசினால் எமக்கு பிரச்சினை இல்லை. என்றாலும் பயங்கரவாதத்தை உருவாக்க முனையும் கருத்தானது பெரும் தவாறாகும். ஆகவே இது தொடர்பில் சபாநாயகர் என்ற வகையில் உங்கள் நடவடிக்கை என்ன? என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM