இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.ஓ.சி. நிறுவனத்தினால் எரிபொருள் விலை இன்று அதிகரிக்கப்படுள்ளது.
அதன்படி லங்கா ஓட்டோ டீசல் 118 ரூபாவாகவும் எக்ஸ்ரா மைல் 122 ரூபாவாகவும் லங்கா சுப்பர் டீசல் (யூரோ 4) 129 ரூபாவாகவும் லங்கா பெற்றோல் 92 ஒக்டெய்ன் 146 ரூபாவாகவும் எக்ஸ்ரா பிரிமியம் யூரோ 3 - 149 ரூபாவாகவும் எக்ஸ்ரா பிரிமியம் 95 ஒக்டெய்ன்( யூரோ 4) - 158 ரூபாவாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.
அதன்படி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டன.
அதன்படி ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி , தற்போது 137 ரூபாவாக விற்கப்படும் பெற்றோல் லீற்றரின் புதிய விலை 145 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி , அதன் புதிய விலை 155 ரூபாவாகும். டீசல் லீற்றரின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் புதிய விலை 118 ரூபாவாகும்.
சூப்பர் டீசல் லீற்றரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில , சூப்பர் டீசல் லீற்றரின் புதிய விலை 129 ரூபாவாகும்.
இந்நிலையில், ஐ.ஓ.சி. நிறுவனத்தினால் இன்று எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM