தனக்கு உணவு கொடுத்துக்கொண்டிருந்த பெண் ஒருவரை சுறாவொன்று கடலுக்குள் இழுத்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரைச் சேர்ந்த மெலிஷா புரூனிங் எனும் 34 வயதான பெண், மேற்கு அவுஸ்திரேலியாவின் டுகோங் குடாவில் படகொன்றில் உல்லாசப் பயணத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது, படகின் பின்புறமாக நீந்திக்கொண்டிருந்த சிறிய சுறாக்கள் சிலவற்றுக்கு அவர் உணவை எறிந்துகொண்டிருந்தார்.
அப்போது அவற்றில் ஒரு சுறா மேல் நோக்கிப் பாய்ந்து மெலிஷாவின் விரலைக் கௌவியது. இதனால் நிலை தடுமாறி கடலுக்குள் வீழ்ந்தார் மெலிஷா.
பின்னர் அருகிலிருந்தவர்கள் அவரைக் காப்பாற்றினர். எனினும், அவரின் விரலில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது.
எவ்வாறெனினும் இதை சுறா நடத்திய தாக்குதலாக தான் கருதவில்லை என மெலிஷா புரூனிங் கூறியுள்ளார். “எனது முட்டாள் தனமான செயற்பாட்டினால் விளைவை நான் எதிர்கொண்டேன். சுறாக்களை அவற்றின் போக்கில் விட்டுவிட வேண்டுமென்ற பாடத்தை நான் கற்றுக்கொண்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM