சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் ரூபா 800 மில்லியன் ரூபா பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நீல் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா எயார்லைன்ஸ் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மிகப்பெரிய நிதியை நிலுவையாக செலுத்த வேண்டியிருந்தது.
இந்நிதியை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எயர்லைன்ஸ் நிறுவனத்துடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது.
இந்நிலையில் சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் ரூபா 800 மில்லியனை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் அரச தொழில் முயற்ச்சி அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் ஹேவாவிதாரன, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங்க மற்றும் சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ராஜித பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இந்த பேச்சுவார்த்தை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது.
சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் ரூபா 13.45 பில்லியன் கடன் நிலுவையில் முதற்கட்டமாக ரூபா 800 மில்லியனை வழங்க தீர்மானித்துள்ளது. மீகுதிப் பணத் தொகையை செலுத்துவதற்கு, அமைச்சரவையின் அனுமதியைபெற்று தனியார் வங்கியில் கடன்பெறமுயற்சிக்கவுள்ளது.
இதையடுத்து தொடர்ந்து சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM