அமெரிக்காவின் கோரிக்கையை அடுத்து சந்தையை சமம் செய்ய எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயார் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் மாதம் 4ஆம் திகதியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
உலக அளவில் பிரதான எண்ணெய் உற்பத்தியாளராக விளங்கி வரும் ஈரானுக்கு இவ்வாறு நெருக்கடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதன் காரணமாக வாகனங்களுக்கான எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது.
இதனை கட்டுக்குள் கொண்டு வர சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக ட்ரம்ப் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சர்வதேச எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் சவுதி அரேபியா நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பீப்பாய்கள் வரை எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதனை ஏற்றுக்கொண்ட மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ், தேவைப்பட்டால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.
இந்த தகவலை ட்ரம்ப் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சவுதி அரேபியா சர்வதேச அளவில் தேவையை சமம் செய்ய எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயார் என அறிவித்துள்ளது.
கூடுதல் உற்பத்தி திறனை பயன்படுத்த தயராகி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உற்பத்தி இரண்டு மில்லியன் பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM