(தினூஷா)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கடன் நிறுவனங்களிடமிருந்து கடன் பெறாமல் சீனாவிடமிருந்து கடன் பெற்றமை ஒரு இராஜந்திரமே என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சி மீண்டும் தோற்றம் பெற்றால் தற்போதைய ஜனநாயகம் அழிக்கப்படும் என்று சிலர் குற்றச்சாட்டுக்களை சாட்டி வருகின்றனர்.
1948 ஆம் ஆண்டு தொடக்கம் எந்த தலைவர்களும் நாட்டில் உறுதியான ஜனநாயகத்தினை தோற்றுவிக்கவில்லை 30 வருட காலமாக இடம் பெற்ற பயங்கரவாதத்தினை முற்றாக அழித்து நாட்டை ஒன்றுபடுத்தியவர் மீண்டும் அந்த கொடிய யுகத்தினை ஏற்படுத்த மாட்டார் என்ற விடயம் யாவரும் அறிந்ததே.
இந் நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கடன் நிறுவனங்களிடமிருந்து கடன் பெறாமல் சீனாவிடமிருந்து கடன் பெற்றமை ஒரு இராஜந்திரமே. ஏனெனில் அரசாங்கம் ஒரு குறித்த நிறுவனத்திடமிருந்து கடன் பெற்றால் அழுத்தங்களின் மத்தியிலே அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்.
இதன் காரணமாகதான் தேசிய அரசாங்கம் இன்று சர்வதேச கடன் நிறுவனங்களிடமிருந்தது கடன் பெற்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM