"மஹிந்த அணி­யா­கவே இனிமேல் செயற்­ப­டுவோம்"

Published By: Vishnu

30 Jun, 2018 | 08:47 AM
image

(ஆர்.யசி )

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இடம்­பெறும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­தி­ய ­குழு உள்­ளிட்ட சகல குழுக் கூட்­டங்­க­ளையும் நிரா­க­ரித்து தாம் மஹிந்த ராஜபக்ஷவுடன் மாத்­திரம் இணைந்து செயற்­ப­ட­வுள்ளோம்.  இனிமேல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சுயா­தீன அணி­யினர் இல்லை என அவ்­வ­ணி­யினர் தெரிவித்துள்ளனர்.

 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சுயா ­தீன அணி­யினர் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யி­னரை சந்­தித்துப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்­தனர். முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ மற்றும் ஜீ.எல்.பீரிஸ் உள்­ளிட்ட பொது­ஜன முன்­னணி உறுப்­பி­னர்­களை சந்­தித்­தனர். இச் சந்­திப்பு குறித்து வின­விய போதே அவர்கள் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர். 

இது குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  ஜோன் சென­வி­ரத்ன தெரிவிக்­கையில், 

இந்த ஆட்சி ஆரம்­பிக்­கப்­பட்ட பின்னர் எமக்கும் கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்குமிடையில் விரிசல் நிலை­மைகள் ஏற்­பட்­டன. பிர­தான செயற்­பா­டு­களில் நாம் முரண்­ப­டக்­கூ­டிய நிலை­மைகள் ஏற்­பட்­டன. எனினும் இச் சந்­திப்பின் மூல­மாக எமது இரு தரப்­பி­னரும் இணைந்து செயற்­ப­டக்­கூ­டி­யதும் அடுத்தகட்டப் பயணம் ஒன்­றினை தெளி­வாக முன்­னெ­டுக்­கவும் கூடி­ய­தாக அமைந்­துள்­ளது. அடுத்தகட்­ட­மாக நாம் இரு தரப்­பி­னரும் பொது­வான வேலைத்­திட்டம் ஒன்றின் கீழ் செயற்­படத் தீர்­மானம் எடுத்­துள்ளோம். 

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து அர­சாங்­கத்திலிருந்த நேரத்தில் எமது இரு தரப்­பி­ன­ரையும் இணைக்கும் செயற்­பா­டு­க­ளையும் அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்தி தீர்­வு­களை உரு­வாக்கும் செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்தோம். எனினும் அவை இரண்­டுமே முடி­யாமல் போயுள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து எம்மால் ஒரு­போதும் பய­ணிக்க முடி­யாது என்­பது குறு­கிய காலத்திலேயே தெரிந்­து­விட்­டது. 

ஆகவே நாம் அர­சாங்­கத்திலிருந்து வெளி­யேறி எதி­ர­ணியில் இணைந்­து­கொண்டோம். நாம் எதிர்க்­கட்­சிக்கு வந்­த­வுடன் இரு தோணிகளில் கால் வைக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வில்லை. இரு கால்­க­ளையும் எதிர்க்­கட்சியின் பக்­கமே வைத்­து­கொண்டு செயற்­ப­டு­கின்றோம். "நாம் அந்­தப்­பக்­கமும் உள்ளோம் – இந்தப் பக்­கமும் உள்ளோம் – ஜனா­தி­ப­தி­யு­டனும் செயற்­ப­டு­கின்றோம் – மஹிந்த அணி­யு­டனும் உள்ளோம்" போன்ற கருத்­துக்களை முன்­வைப்­பது தவ­றா­னது. நாம் இனி அந்தப் பக்கம் செல்­லப்­போ­வ­தில்லை. மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்தே அடுத்தகட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம் என்று குறிப்­பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40