பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு தனது செஞ்சோற்றுக் கடனை தீர்க்கின்றார். எம்மை துரோகிகள் என சாடும் பிரதமர் இன்று நாட்டின் அனைத்து வளங்களையும் கூட்டு ஒப்பந்தம் மூலம் இந்தியாவிற்கு எழுதிக் கொடுக்க முயற்சிக்கின்றார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கையின் கடல் வளத்தை இந்தியாவிடமிருந்து பாதுகாக்க அரசாங்கம் இது வரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை -– இந்திய கூட்டு ஆணைக்குழுவில் இதற்கான சந்தர்ப்பம் இருந்தும் அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக எமது பொருளாதார நிலைகள் இந்தியாவிற்கு தாரைவார்த்து கொடுக்கப்படுகின்றமை வேதனையளிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கைச்சாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை–இந்திய கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தேசத் துரோகிகள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உண்மையில் யார் துரோகிகள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய மீனவ படகுகள் பல எமது கடற்பரப்பிற்குள் வந்து எமது மீன் வளத்தை சூறையாடிச் செல்கின்றன. இது வரையில் 90 படகுகள் மற்றும் 100க்கும் அதிகமான இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு இந்தியா எமது வளத்தை கொள்ளையடிக்கின்ற நிலையில் அரசாங்கம் அதனை தடுக்க எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்காது மேலும் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டு மொத்த வளத்தையும் இந்தியாவிற்கு தாரைவார்த்துக் கொடுக்கின்றது.
இலங்கை –- இந்திய கூட்டு ஆணைக்குழுவின் போது மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படக் கூடிய சந்தர்ப்பம் காணப்பட்டது. அதனை அரசாங்கம் பயன்படுத்த வில்லை. இந்தியாவிற்கு எதிராக செயற்பட முடியாத வலுவிழந்த நிலையிலேயே அரசாங்கம் காணப்படுகின்றது. கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு உதவி செய்த இந்தியாவிற்கு செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் நிலையிலேயே பிரதமர் செயற்படுகின்றார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM