அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள ‘தி கெப்பிட்டல்’ எனப்படும் தனியார் செய்தி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தின் அன்னாபோலிஸ் பகுதியில் ‘தி கெப்பிட்டல்’ எனப்படும் தனியார் செய்தி நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் அப்பகுதிக்கு சென்ற இனந்தெரியாத நபரொருவர் அலுவலத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதில் 5 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர் யார்?, எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார்? என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM