அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக சிறியளவிலான கணினியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. 0.3 மி.மீற்றர் நீளமுள்ள இந்த கணினியை அவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
அதாவது ஒரு அரிசியின் பருமனைவிட சிறியளவில் இந்த கணினி அமைந்துள்ளது என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு ஐ.பி.எம். நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் 1 மில்லிமீற்றர் நீளமுள்ள சிறிய கணினியை தயாரித்திருந்தது. தற்போது அதைவிட 0.3 மில்லிமீற்றர் நீளத்தில் இந்த கணினியை மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து மிச்சிகன் பல்கலைக்கழக தொழில்நுட்பம் மற்றும் கணினி பொறியியல் பிரிவு பேராசிரியர் டேவிட் பிளாவ் கூறும்போது, “சிறப்பான முறையில் இந்த கணினியை உருவாக்கியுள்ளோம். அதை கணினிகள் என்று அழைக்கலாமா அல்லது வேண்டாமா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
அந்த அளவுக்கு சிறப்பான முறையில் கணினி உருவாகியுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். கணினியின் ரெம், போட்டோவோல்ட்டெய்க், புரசசர்கள், வயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர்கள், ரிசீவர்கள் என அனைத்தும் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM