சிரியாவுக்குள் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆலோசனை கூட்டத்தின்போது ஈராக் போர் விமானங்கள் மேற்கொண்ட வான் தாக்குதலில் 45 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஈராகின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளை ஈராக் ராணுவம் முற்றிலுமாக ஒடுக்கி நாட்டை விட்டு விரட்டி அடித்தது. இந்நிலையில், அங்கிருந்து அகன்று சிரியாவின் எல்லைப்பகுதிக்கு தப்பிச்சென்ற தீவிரவாதிகள் அவ்வப்போது ஈராக் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது சிரியாவில் பதுங்கியிருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் அமெரிக்க விமானப்படையுடன் ஈராக்கின் விமானப்படைகளும் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சிரியாவின் ஹாஜின் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆலோசனை கூட்டம் நடத்திய மூன்று வீடுகளின் மீது ஈராக் போர் விமானங்கள் நேற்றிரவு தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் போர்துறை அதிகாரி, ஊடகத்துறை தலைமை பொறுப்பாளர் உட்பட 45 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM