பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் பிணை வழங்கியது.
பா.ஜனதா கட்சி பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக வெளியிட்டிருந்த கருத்து கடும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் அவரை கைது செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், எஸ்.வி. சேகர் மீது மத்திய ரயில் நிலையம் அருகில் உள்ள அல்லிகுளம் எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி எஸ்.வி.சேகர் இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனபோது அவர் பிணைக்கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த நீதிமன்றம், எஸ்.வி.சேகருக்கு பிணை வழங்கியது. மேலும், ஜூலை 18ம் திகதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM