வவுனியாவை சோகத்திற்குள்ளாக்கிய சகோதரிகளின் தொடர் உயிரிழப்பு 

Published By: Priyatharshan

18 Jun, 2018 | 12:07 PM
image

இருதய நோயால் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சகோதரியும் சற்றுமுன் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார்.

இந்த இரு சகோதரிகளின் தொடர் உயிரிழப்பானது வவுனியா பிரதேசத்தை மிகவும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.

வவுனியா கரப்பன்காட்டை சேர்ந்த திரு திருமதி ரியோன் தம்பதிகளின் இரு பெண் குழந்தைகளும் இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 22.05.2018  அன்று இரு பெண் குழந்தைகளில் ஒருவரான 8 வயதுடைய தன்சிகா என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை மற்றைய பெண் குழந்தையான 7 வயதான சரணிக்கா எனும் சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

ஒரே குடும்பத்தில் தொடர்ந்து இடம்பெற்ற சிறார்களின் உயிரிழப்பினால் வவுனியா நகரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் குறித்த சகோதரிகளின் மூத்த சகோதரனும் ஏழு வயதில் இதே நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01