வெனிசுலா நாட்டில் இரவு நேர களியாட்ட விடுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி17 பேர் உயிரிழந்தனர்
வெனிசூலா நாட்டின் தலை நகர் கராக்கஸில் லாஸ் காட்டராஸ் என்ற இரவு நேர களியாட்ட விடுதியில் .நேற்று முன்தினம் பாடசாலை ஆண்டு நிறைவு விழாவையொட்டி விருந்து நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இரு தரப்பினரிடையே மோதல் வெடித்துள்ளது.. அதைத் கட்டுப்படுத்தும் முயற்சியாக அங்கு கண்ணீர்ப்புகை குண்டு வெடிக்கப்பட்டது. இதனால் மக்கள் அங்கிருந்து ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்த பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தும், மூச்சு திணறியும் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 16-20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தகவல்கள் வெளியதகியுள்ளன.
மேலும் 5 பேர் படுகாயங்களோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது..
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM