பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் அத்தே கலகொட ஞனாசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்து ஹோமாகம நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளி என ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் கடந்த 24 ஆம் திகதி அறிவித்தது.
இந் நிலையில் ஹோமாகமக நீதிவான் உதேஷ் ரணதுங்க அவருக்கு எதிரான தண்டனையை நேற்று அறிவிக்கவுள்ளதாக முன்பே அறிவித்திருந்தார். இதன்படியே இவருக்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளுக்கான சட்ட விதிமுறைகளே, கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் பின்பற்றப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
சிறைத்தண்டனை விதிக்கப்படடுள்ள ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று மாலை சிறைவைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஏனைய கைதிகளுக்கான ஆடையையே அவருக்கும் அணிய நேரிடும் என்றும், விசேட பாதுகாப்பு அவசியமாயின் அதனை வழங்க முடியும் என்றும் சிறைச்சாலைகள் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM