பிரதியமைச்சராக மஸ்தானை நியமித்தமை இந்துக்களுக்கு இழைத்த அநீதியாகும் - சண்குகவரதன்

Published By: Vishnu

14 Jun, 2018 | 02:05 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இந்து மத கலாசார பிரிதியமைச்சராக மஸ்தானை நியமித்தமை இந்து மக்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும் என மேல் மாகாண சபை உறுப்பினர்  சண்குகவரதன் தெரிவித்தார்.

இந்து மத அலுவல்கள் பிரதியமைச்சராக மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  பம்பலப்பிடி கதிரேசன் மண்டபத்தின் முன்னால் இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு  கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிபபிடுகையில்.

பாராளுமன்றத்தில் தமிழ் இந்து பிரதிநிகள் இல்லாமையின் காரணமாகவோ  அரசாங்கம் முஸ்லிம் இனத்தவருக்கு இந்து மத அலுவல்கள் பிரதியமைச்சு பதவியினை வழங்கியுள்ளது. அமைச்சர்  சுவாமிநாதனும் இவ்விடயத்திற்கு உடந்தையாக உள்ளார் ஆகவே அவரும் உடனடியாக பதவி விலக வேண்டும்.

மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்குடனேயே இந்துமத அலுவல்கள் பிரதியமைச்சராக மஸ்தானை நியமித்தோம் என்று குறிப்பிடுகின்றனர். ஆனல் இந்த நடவடிக்கையினால் ஒரு போதும் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படாது.

இதுவரை காலமும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையே சிறந்த நல்லிணக்கம் ஒன்று காணப்பட்டது. அரசாங்கத்தின் தற்போதைய முறையற்ற செயற்பாடு காரணமாக எதிர்காலத்தில் நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படலாம். 

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை  ஏற்படுத்த வேண்டுமாயின் அதனை பாரபட்சம் பாராது மேற்கொண்டிருக்க வேண்டும். பௌத்த மத அலுவல்கள் அமைச்சர் பதவிக்கு ரிஷாத் பதியுதினையும், முஸ்லிம் மத விவகார அமைச்சர் பதவியை ஞானசார தேரருக்கும் வழங்கியிருந்தால் நாடு தழுவிய ரீதியில் நல்லிணக்கம் ஏற்பட்டிருக்கும். 

 இதனை தவிர்த்து இந்து மத விடயத்தில் மாத்திரம் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமை இந்து மக்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகவே காணப்படுகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசியத்தை பாதுகாப்பதற்காக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில்...

2025-01-19 20:00:43
news-image

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

2025-01-19 22:14:13
news-image

அரசாங்கம் மக்களின் வாழ்க்கை செலவை அதிகரித்ததே...

2025-01-19 22:09:10
news-image

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக அரசாங்கம் எவ்வாறு...

2025-01-19 19:54:42
news-image

நாடளாவிய ரீதியிலுள்ள நெல் களஞ்சியசாலைகளை தூய்மைப்படுத்தும்...

2025-01-19 20:06:47
news-image

சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்த...

2025-01-19 20:55:39
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து...

2025-01-19 20:26:23
news-image

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி...

2025-01-19 19:58:46
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02
news-image

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை...

2025-01-19 19:14:22